போகி பண்டிகையன்று பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுத்துகள்கள் காற்றில் கலந்து சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதன்மூலம் கண், மூக்கு, இதர உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாலை, இரயில், விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

