கூர்நோக்கு இல்லம்: வார்டனை தாக்கி அறையில் பூட்டிவிட்டு தப்பிய சிறுவர்கள்!

kurnokku illam 1 - 2026

கோயம்புத்தூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக 11 சிறுவர்கள் இந்த கோவை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு, இவர்களை கண்காணிப்பதற்காக வார்டனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரவு 7.30 மணி அளவில் இரவு சாப்பாட்டுக்காக சிறுவர்கள் வெளியே விடப்பட்ட சமயத்தில், 6 சிறுவர்கள் வார்டனை தாக்கி அவரை தாங்கள் தங்கியிருந்த அறையில் தள்ளி வெளியே பூட்டியுள்ளனர். அதோடு மற்ற ஐந்து சிறுவர்களையும் மற்றொரு அறையில் பூட்டிவிட்டு 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் வெளியே உள்ள கேட்டின் சாவியை எடுத்துக் கொண்ட சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அறையில் பூட்டப்பட்ட வார்டன் நீண்ட நேரமாக சத்தம் போட்டு, சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்துள்ளார்.

அதன்பின் அவர் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு சிறுவர்கள் தப்பித்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி இரவு 10 மணிக்கு காவல்துறையினர் சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு சிறுவர்கள் தப்பி ஓடி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனதால் அவர்கள் வெளியூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் அவர்களை ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

ஆனாலும் அந்த ஆறு சிறுவர்களும் காவல்துறையினரின் கண்ணில் படாமல் தப்பித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Topics

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories