December 6, 2025, 3:20 PM
29.4 C
Chennai

கூர்நோக்கு இல்லம்: வார்டனை தாக்கி அறையில் பூட்டிவிட்டு தப்பிய சிறுவர்கள்!

kurnokku illam 1 - 2025

கோயம்புத்தூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக 11 சிறுவர்கள் இந்த கோவை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு, இவர்களை கண்காணிப்பதற்காக வார்டனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரவு 7.30 மணி அளவில் இரவு சாப்பாட்டுக்காக சிறுவர்கள் வெளியே விடப்பட்ட சமயத்தில், 6 சிறுவர்கள் வார்டனை தாக்கி அவரை தாங்கள் தங்கியிருந்த அறையில் தள்ளி வெளியே பூட்டியுள்ளனர். அதோடு மற்ற ஐந்து சிறுவர்களையும் மற்றொரு அறையில் பூட்டிவிட்டு 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் வெளியே உள்ள கேட்டின் சாவியை எடுத்துக் கொண்ட சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அறையில் பூட்டப்பட்ட வார்டன் நீண்ட நேரமாக சத்தம் போட்டு, சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்துள்ளார்.

அதன்பின் அவர் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு சிறுவர்கள் தப்பித்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி இரவு 10 மணிக்கு காவல்துறையினர் சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு சிறுவர்கள் தப்பி ஓடி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனதால் அவர்கள் வெளியூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் அவர்களை ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

ஆனாலும் அந்த ஆறு சிறுவர்களும் காவல்துறையினரின் கண்ணில் படாமல் தப்பித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories