December 6, 2025, 10:19 PM
25.6 C
Chennai

அரசு மருத்துவமனைகள் நரகம்.. கூறிய கமலுக்கு வலுக்கும் கண்டனம்!

kamal-madurai-int
kamal-madurai-int

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ”அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம்” என்று பேசியுள்ளார். இது அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை தவிர்த்து பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளுக்கே வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் இதுவரை 8.5 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை அளிக்கும்போது தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

rudhran - 2025

இதன்மூலம் பொதுமக்களிடம் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கமல்ஹாசன் இவ்வாறு கூறியிருப்பது மருத்துவர்கள், செவிலியர்களை வேதனைப்படுத்தியுள்ளது. முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மனநல மருத்துவர் ஆர்.கே.ருத்ரன் முகநூலில் கமல்ஹாசனை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ‘அரசுமருத்துவமனைகள் உண்மையிலேயே அல்லலுற்றவரின் அல்லல் களைய, அல்லல் படும் அற்புத மனிதர்கள் செயல்படும் இடம்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி மருத்துவர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டபோது, ‘எப்படிபேசுகிறார்களோ, அப்படித்தான் விமர்சனம் வரும். முன்பு இருந்ததைவிட அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு தற்போது மிகவும் நன்றாக உள்ளது. அதுவும், கொரோனா தொற்று காலத்தில் அரசுமருத்துவமனைகளின் சேவை மகத்தானது. முதல்வர், அமைச்சர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அரசுமருத்துவமனைகளில் சிகிச்சைபெற வேண்டும். அப்போதுதான்அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories