பெற்றோரிடம் கோபித்து வீட்டை விட்டு வந்த இளம்பெண்! பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்!

madhurai
madhurai

மதுரையில் பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உள்ள வீட்டில் விபச்சாரத் தொழில் நடைபெறுவதாக ரோந்து பணியில் ஈடுபட்ட மதுரை எஸ்எஸ் காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில், ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு போலீசார் வாடிக்கையாளர் போன்று சென்றுள்ளனர்.

அப்போது, அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கிருந்த ராணி (எ) அழகம்மாள், ரைமான்பீவி, ராமசாமி, ரமேஷ், நிசாந்த் ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை சம்பவ இடத்திலேயே கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அந்த கும்பலை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், 20 வயது பெண் ஒருவரை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. ஜோதி (20) என்ற அந்த பெண் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்துள்ளார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

அப்போது, இந்த கும்பலிடம் சிக்கிய அந்த பெண்ணை கடந்த சில மாதங்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் சிக்கி தவித்த அந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியில் வரும் இளம் பெண்களை குறிவைத்து இதுபோன்ற செயலில் ஈடுபடும் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தவறான நபர்களுடன் பழகுவதால் ஏற்படும் பாதிப்பை உணர வேண்டும் என்றும் போலீசார் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories