December 6, 2025, 6:32 AM
23.8 C
Chennai

பெற்றோரிடம் கோபித்து வீட்டை விட்டு வந்த இளம்பெண்! பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்!

madhurai
madhurai

மதுரையில் பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உள்ள வீட்டில் விபச்சாரத் தொழில் நடைபெறுவதாக ரோந்து பணியில் ஈடுபட்ட மதுரை எஸ்எஸ் காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில், ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு போலீசார் வாடிக்கையாளர் போன்று சென்றுள்ளனர்.

அப்போது, அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கிருந்த ராணி (எ) அழகம்மாள், ரைமான்பீவி, ராமசாமி, ரமேஷ், நிசாந்த் ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை சம்பவ இடத்திலேயே கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அந்த கும்பலை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், 20 வயது பெண் ஒருவரை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. ஜோதி (20) என்ற அந்த பெண் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்துள்ளார்.

அப்போது, இந்த கும்பலிடம் சிக்கிய அந்த பெண்ணை கடந்த சில மாதங்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் சிக்கி தவித்த அந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியில் வரும் இளம் பெண்களை குறிவைத்து இதுபோன்ற செயலில் ஈடுபடும் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தவறான நபர்களுடன் பழகுவதால் ஏற்படும் பாதிப்பை உணர வேண்டும் என்றும் போலீசார் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories