December 6, 2025, 9:40 AM
26.8 C
Chennai

நாயைத் திருடிக் சென்ற நபர்! சிசிடிவி மூலம் கைப்பற்றிய போலீஸ்!

dog - 2025

மதுரையில் வளர்ப்பு நாயை திருடிய இளைஞரை சிசிசிடி காட்சியின் மூலம் கைது செய்த போலீசார், நாயை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த ஆவின் ஊழியரான சரவணகுமார், அவரது வீட்டில் புறா , நாய், ஆடு என பல வீட்டு வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வந்தார்.

கடந்த ஜூலை 10 ஆம் தேதி மதியம், அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட ராஜபாளையம் சிப்பிப்பாறை கண்ணி இனத்தை சேர்ந்த 8 மாத நாய் குட்டி காணாமல் போனது.

பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சரவணகுமாரின் வீட்டருகே சலூன் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் TN-58 – BA 9858 என்ற எண்ணுடைய டாட்டா ஏஸ் (குட்டி யானை) வாகனத்தில் நாய் திருடி செல்லப்பட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது.

வாகன எண்ணை வைத்து சரவணகுமார் தேடி வந்த நிலையில், நேற்று (ஜூலை 20) மேலமடை சிக்னல் அருகே சிசிடிவியில் பதிவான வாகனம் வந்ததைப் பார்த்து உடனடியாக வாகனத்தை நிறுத்தி, போலீசாரையும் உதவிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாகனம் மதுரை ஆழ்வார்புரம் கருப்பையா காம்பவுண்டில் குடியிருந்து வரும் அர்ஜூன் என்பவரது வாகனம் என்பதும், நாய் வளர்க்கும் ஆசையில் நாய்க்குட்டியை அவரே தன்னுடைய வாகனத்தில் திருடிச் சென்றதும் தெரிய வந்தது.

நாயின் உரிமையாளர் சரவணகுமார் பேசுகையில்,
“8 மாத குட்டி என்பதால் இதுவும் குழந்தை போன்றது தான். எனவே, யார் அழைத்தாலும் பின்னாடியே செல்லும் குணம் கொண்டது இந்த நாய்.

மேலும், மதிய உணவு வேளையில் நான் சாப்பிடும் போது நாயையும் சாப்பிட அவிழ்த்து விடுவது வழக்கம். எப்போதும், அதிகபட்சம் அரை மணி நேரத்திற்குள் வீடு திரும்பி விடும். ஆனால், அன்று அவிழ்த்து விடப்பட்ட நாய் வெகு நேரமாக வீட்டிற்கு வரவில்லை.

அதன் பின்னரே அருகிலிருந்த சலூன் கடையின் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து நாய் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் ஒரு உறுப்பினர் போல வளர்க்கப்பட்ட நாய் இல்லாமல் இத்தனை நாட்களாக மனம் தவித்த நிலையில், நாய் கிடைத்த பின்னரே குடும்பத்தில் அமைதி திரும்பியுள்ளது” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

இதையடுத்து, நாயை திருட பயன்படுத்திய வாகனம் மற்றும் அவர் திருடி சென்ற நாய் குட்டியும் பத்திரமாக மீட்கப்பட்டு, நாயை திருடிய குற்றத்திற்காக அர்ஜூன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories