உடல் முழுவதும் தீ வைத்து கொண்ட வாலிபர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து உடல் கருகி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யநாராயணன் மற்றும் சூரிய நாராயணன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர்.
இதில் சூரிய நாராயணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் சத்தியநாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் வடபழனியில் இருக்கும் சங்கரமடத்தில் சமையல்காரராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சத்யநாராயணன் வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதனை அடுத்து சத்யநாராயணன் நெமிலிச்சேரி மேம்பாலத்தின் மீது ஏறி திடீரென தனது உடல் முழுவதும் பெற்றோலை ஊற்றி கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
அதன் பின் சத்தியநாராயணனின் உடல் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் திடீரென அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.
இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே சத்யநாராயணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி தகவலறிந்த காவல்தறையினர் அங்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமாகாத ஏக்கத்தில் சத்தியநாராயணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.