5 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

Published:

 

நெல்லை  மாவட்டத்தில், 5 கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்மா திட்ட சிறப்பு முகாம்  5 கிராமங்களில் நடைபெற உள்ளது. திருநெல்வேலி வட்டத்துக்கு உள்பட்ட கண்டியப்பேரி பகுதி-2, சங்கரன்கோவில் வட்டத்துக்கு உள்பட்ட சத்திரப்பட்டி, அம்பாசமுத்திரம் வட்டத்துக்கு உள்பட்ட இடைகால் பகுதி-1, நான்குனேரி வட்டத்துக்கு உள்பட்ட மூலைக்கரைப்பட்டி பகுதி-1, மூலைக்கரைப்பட்டி பகுதி-2 ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்பஅட்டை உள்ளிட்டவற்றுக்கு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img