கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி சிறையில் அடைப்பு

Published:

traffic-ramasamyசென்னை: சென்னை வேப்பேரியில் ஹோட்டல் உரிமையாளர் காரை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டார். வேப்பேரி ஜவஹர்நகரைச் சேர்ந்த வீரமணி (59) ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். வீரமணி புதன்கிழமை வேப்பேரி டாக்டர் அழகப்பா சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் டிராபிக் ராமசாமி வழியை மறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தாராம். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த வீரமணி, டிராபிக் ராமசாமியை சாலை ஓரம் நின்று பேட்டியளிக்குமாறு கூறினாராம். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, முற்றியதில், டிராபிக் ராமசாமி, வீரமணியின் கார் கண்ணாடியை உடைத்து, வீரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வீரமணி, வேப்பேரி காவல் நிலையத்தில் செய்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தி.நகரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த டிராபிக் ராமசாமியை போலீஸார் வியாழக்கிழமை இன்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமசாமி, சைதாப்பேட்டை 14வது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கயல்விழி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில், டிராபிக் ராமசாமி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img