கடவுளுக்கு எதிராகப் பேசினால் எங்களாலும் கல்லெறிய முடியும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்!

திருச்செங்கோடு:
கடவுளுக்கு எதிராகப் பேசினால், எங்களாலும் கல்லெறிய முடியும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் ஆவேசமாகப் பேசினார். ஆண்டாள் குறித்த சர்ச்சை அதிகமான நிலையில், துறவி ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது, இந்த விஷயத்தில் அவர்கள் எவ்வளவு தூரம் உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகிறது.

இறை நம்பிக்கைக்கு எதிராகப் பேசினால் எங்களாலும் சோடா பாட்டில் வீச முடியும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் பேசியுள்ளார். கடவுளுக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது தங்களாலும் கல்லெறிய முடியும் என்று, கவிஞர் வைரமுத்துவை கண்டித்து திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் சடகோப ராமானுஜ ஜீயர் பேசினார்.

வைரமுத்து வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த அவர், இறை நம்பிக்கையை யார் அவமதித்தாலும் இனி சும்மா இருக்க போவதில்லை என்றார். மேலும் எங்களுக்கும் கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் தெரியும்; ஆனால் அதை செய்ய மாட்டோம் என்றார்.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

வைரமுத்து சொல்வது போல், அவர் தன் அம்மாவுக்கு என்ன இடத்தைத் தருகிறாரோ, அதை ஆண்டாளுக்கு தருவதாக இருந்தால், அவர் அம்மாவை உண்மையாகவே வணங்குவதாக நினைத்தால் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கும் வரை இந்து மக்களாகிய நாம் அனைவரும் ஆண்டாளின் குழந்தைகள் அனைவரும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை, அறவழியில் போராடுவோம்.

அவசியம் ஏற்பட்டால் ஆங்காங்கே இருக்கக் கூடிய அனைத்து ஊர்களிலும் இருக்கக் கூடிய அனைத்து கடவுளின் குழந்தைகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.
பிப். 3ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் தொலைபேசி மூலம் தகவல் கூறுவோம். நாங்கள் சொல்வது போல் கூடியிருந்து சொல்வதைக் கேட்கவேண்டும். இனி எவரும் இந்து மதத்தைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும். அதற்காக, நாங்கள் சொல்வது போல் நீங்கள் கூடியிருந்து… நீங்கள் கேட்கவேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்களையும் நாம் கேட்க வைக்க வேண்டும்!

இப்போது கூட, அதே பிப்ரவரி 3 ஆம் நாள், கொளத்தூரில் ஆண்டாள் குறித்து சர்ச்சை செய்யப் போவதாக கூறியிருக்கிறார்கள். ஏற்கெனவே ஒருவர் வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசி விட்டுப் போய்விட்டார். ஆனால் இனி உலகத்தில் எந்தத் தாயையும் எந்தக் கடவுளையும் யாரும் மேடை போட்டு பேசக் கூடாது.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

இத்தனை நாட்கள் சாமியார்கள் எல்லாம் சும்மாத்தான் உட்கார்ந்திருந்தோம்.. ஆனால், எங்களாலும் கல்லெறிய இயலும், சோடா பாட்டில் எடுப்போம்… ஆனால்
அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று அறவழியில் போராடுவோம்.
ஆண்டாள் தாயாரைப் பழித்துப் பேசியதும் நாம் உணர்ந்த நிலை, இனி இந்து மக்களாகிய யாருக்கும் வரக்கூடாது. என்று பேசினார்.

ஆண்டாள் நாச்சியாரை இழிவாகப் பேசிய வைரமுத்துவைக் கண்டித்து கண்டனக் கூட்டம் திருச்செங்கோடு ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், கோவை கந்தலோகம் முருகனடிமை பாஸ்கர சுவாமிகள், அகில பாரத துறவியர் பேரவை கொங்கு மண்டல செயலாளர் சுவாமி யுக்தேஸ்வரானந்த புரி மகராஜ், ஆயக்குடி குமார், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் இளமுருகன், தேசிய சிந்தனை பேரவை செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருச்செங்கோடு மாதொருபாகன் இறை பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories