மதுரையில் ஆளுநர் ஆய்வு; அதிகாரிகளுடன் ஆலோசனை: மறியல் செய்த திமுக.,வினர் கைது!

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மதுரை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து உயர் அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்தினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மதுரை வந்திருந்தார். நேற்று காலை மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர், நாகமலை புதுக்கோட்டை என்ஜிஓ காலனியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த ஆளுநர் அங்கிருந்த குழந்தைகளுக்கு மதிய உணவாக தக்காளி சாதம், வாழைப்பழம், லட்டு வழங்கினார். சுயஉதவிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த மையத்தில் பல்வேறு கைவினை பொருட்களின் தயாரிப்பு, விற்பனை விவரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், தூய்மை பாரதம் இயக்கம், முழு சுகாதார முன்னேற்றம் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை பார்வையிட்டு, தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ரதத்தை தொடங்கி வைத்தார். பின்னர் காந்தி அருங்காட்சியகத்துக்குச் சென்ற ஆளுநர், அங்கே மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள், காந்தி தொடர்பான சுதந்திரப் போராட்ட கால அரிய புகைப்படங்களைப் பார்த்து வியந்தார்.

தொடர்ந்து அரசு சுற்றுலா மாளிகைக்குச் சென்ற ஆளுநர், அதிகாரிகளுடன் மாவட்ட செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பொதுமக்களிடம் அவர் மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், தெற்கு சித்திரை, மேலமாசி வீதிகளில் ஆளுநர் தூய்மை பணியில் ஈடுபட்டார். பக்தர்களுக்கென மீனாட்சி அம்மன் கோவிலில் புதிதாக வாங்கிய 4 பேட்டரி கார்களை ஆளுநர் தொடங்கி வைத்தார்.

இதனிடையே ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகமலை புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக.,வினரை போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories