ரூ.50 பஸ் பாஸை ஏன் நிறுத்தி வைத்தோம்: அமைச்சரின் புது விளக்கம்!

சென்னை:
ரூ.50க்கான ஒரு நாள் பாஸ் ஏன் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் புது விளக்கத்தை அளித்துள்ளார். போலிகள் வந்ததால் ரூ.50 பஸ் பாஸ்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாநகர பஸ்களில் ஒரு நாள் பயணம் செய்ய ரூ.50 பாஸ் வழங்கப்பட்டு வந்தது. அதில் போலிகள் அதிகம் வெளிவந்ததால், அந்த பாஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹாலோகிராம் போன்ற நவீன வசதிகளுடன் பாஸ் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். மற்ற பாஸ்கள் அனைத்தும் வழக்கம்போல வழங்கப்படுகின்றன என்றார்.

மேலும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களில் அவை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று கூறிய விஜயபாஸ்கர், மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் மாநகர பஸ் போக்குவரத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த டிக்கெட் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், மின்சாரத்தில் இயங்கும் பஸ்களின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வாகனத்தில் வேகமாக செல்வோர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலை விதிகளை மதிக்காமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1 லட்சத்து 59 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் மீது போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் காரணமாகத்தான் கடந்த ஓராண்டில் மட்டும் 5,869 விபத்துகள் குறைந்திருக்கின்றன என்று கூறினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

முன்னதாக, ஒருநாள் பாஸ் ரூ.50ல் இருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப் பட்டது. வாராந்திர மாதாந்திர பாஸ் கட்டணங்களும் அதிகரிக்கப் பட்டன. இதனால் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் ஒருநாள் பாஸ் மட்டும் அரசால் விலக்கிக் கொள்ளப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories