சென்னையில் தடம் புரண்ட பறக்கும் ரயில்: கடற்கரை-வேளச்சேரி ரயில் சேவை பாதிப்பு!

Published:

Mundakakanni-Koil-Mylapore சென்னை: சென்னையில் பறக்கும் ரயில் சேவை வழித் தடத்தில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கடற்கரை – வேளச்சேரி இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான ரயில் பாதையில் கடற்கரையில் இருந்து பூங்காநகர் ரயில் நிலையம் வரை தரை வழியாகச் செல்லும். பின்னர் மேலே செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பூங்காநகர் ரயில் நிலையத்தின் தரைப் பகுதியில் பயணிகள் ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் கடற்கரை – வேளச்சேரி வழித் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தண்டவாளத்தில் இருந்து ரயில் விலகிய பகுதியில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் பி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img