ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நேற்று நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். கேரளம் மாநிலம், மலப்புரா மாவட்டம், வழியாடு கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் 12 பேர் வேன் ஒன்றின் மூலம் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் வந்த வேன், ராமநாதபுரம் அருகே மதுரை – மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் அரியமான் கடற்கரைப் பகுதியில் சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் வேன் ஓட்டுநர் சலீம் (28), உதவி ஓட்டுநர்கள் சமீர் (24), ரியாஸ் (24) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் இருந்த கட்டடத் தொழிலாளர்கள் 9 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் கவிழ்ந்து விபத்து: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த குளிர்பானம், பால் விற்பனை முகவரான தாமோதரன் என்பவர், தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் நயினார்கோவில் அருகே ஏ.பனையூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கார் வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், தாமோதரனின் மனைவி அனுசூயா (60), மகள் பிரியதர்ஷினி (38), உறவினர் கேசவன்(55) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
2 min.Read
ராமநாதபுரம்: இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
நெல்லை
தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

