ராமநாதபுரம்: இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நேற்று நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். கேரளம் மாநிலம், மலப்புரா மாவட்டம், வழியாடு கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் 12 பேர் வேன் ஒன்றின் மூலம் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் வந்த வேன், ராமநாதபுரம் அருகே மதுரை – மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் அரியமான் கடற்கரைப் பகுதியில் சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் வேன் ஓட்டுநர் சலீம் (28), உதவி ஓட்டுநர்கள் சமீர் (24), ரியாஸ் (24) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் இருந்த கட்டடத் தொழிலாளர்கள் 9 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் கவிழ்ந்து விபத்து: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த குளிர்பானம், பால் விற்பனை முகவரான தாமோதரன் என்பவர், தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் நயினார்கோவில் அருகே ஏ.பனையூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கார் வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், தாமோதரனின் மனைவி அனுசூயா (60), மகள் பிரியதர்ஷினி (38), உறவினர் கேசவன்(55) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories