புதுதில்லி: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்.23-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் பிப்.22-ம் தேதி நடக்கிறது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்/23-ம் தேதி துவங்கி மேம மாதம் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாள் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையும், அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதங்களும் நடைபெறும். இந்தக் கூட்டத் தொடரில் நிலக்கரிச் சட்டம், இன்சூரன்ஸ் துறையில் நேரடி அன்னிய முதலீடு, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட 6 அவசரச் சட்டங்கள நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது. பிப்.27ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப் படும் பொது பட்ஜெட்டினை வரும் பிப்.28-ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க பிப்.22ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Popular Categories


