சென்னை: குறைவான மதிப்பெண் பெற்று படிப்பில் பின் தங்கியதாக பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சென்னை மந்தைவெளி 2–வது டிரஸ்ட் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவர் பள்ளி ஒன்றில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கரோலின் (13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றதால் கரோலினை பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் நன்றாகப் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

