சக மாணவி பலாத்காரம்: அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது

Published:

rape-victim நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் அபய் பந்த் (18). தில்லியைச் சேர்ந்த இந்தியரான இவர் தனது சக மாணவியின் அறைக்கு அதிகாலை நேரத்தில் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரின் பேரில், பல்கலைக்கழக போலீசார் அபய் பந்த் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். ஆஸ்வேகோ டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அந்தப் பல்கலைக்கழக விதிப்படி, பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் மாணவர் ஒருவர் மீது எழுந்தால், அவர் மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். எனவே அபய் பந்த் தொடர்ந்து, நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img