மத்தியப் பிரதேசத்தில் வனக் காவலர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேட்டில் மத்தியப் பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் யாதவ்வுக்கு நேரடியாக தொடர்பு உள்ளதாக அதிர்ச்த்சி தகவலை வெளியிட்டது சிறப்பு அதிரடிப் படை. பின்னர் அவர் மீது முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்யப்பட்டது இந்நிலையில் ராம்நரேஷ் யாதவை ராஜினாமா செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து ராம்நரேஷ் யாதவ் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். மோசடி வழக்கில் சிக்கிய முதல் ஆளுநரான ராம் நரேஷ் யாதவ் தற்போது பதவி விலகிவிட்டதால் அவர் மீது சிறப்பு விசாரணைக் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழி ஏற்பட்டுள்ளது. எனில், அவர் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது. முன்னர் வந்த செய்தி: ஊழல் வழக்கு பதிவு: ம.பி., ஆளுநரை ராஜினாமா செய்ய உத்தரவு
ஊழல் வழக்கு: உள்துறை வேண்டுகோள்படி ம.பி. ஆளுநர் ராஜினாமா
Published:

