விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் குழந்தை தாய் பலி- உறவினர் மறியல்..

Published:

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் பிறந்த பெண் குழந்தை உயிர் இழப்பு தொடர்பாக உறவினர்கள் இன்று இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை பாரதி நகரைச் சார்ந்தவர் பன்னீர்செல்வம் (40) இவருடைய மனைவி முத்துமாரி (30) முத்துமாரியின் பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை காலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட முத்துமாரிக்கு நேற்று அதிகாலை பெண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் இறந்து பிறந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததாகவும் இதை தொடர்ந்து இறந்த குழந்தையின் உடலை பெற்ற உறவினர்கள் இறுதிச் சடங்கை முடித்து நிலையில் குழந்தை பிறந்ததிலிருந்து தாய் முத்துமாரியை உறவினர்கள் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில் முத்துமாரியை பார்க்க மாலை வரை மருத்துவ துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் அனுமதிக்காத நிலையில் தொடர்ந்து குடும்பத்தினர் பிரச்சனையில் ஈடுபட்டதை அடுத்து முத்துமாரி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரி உறவினர்கள் முத்துமாரியம்மன் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேறு மாவட்ட மருத்துவர்கள் வரவேண்டும் என கூறி கோரிக்கை வைத்திருந்தனர் இறப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் அளித்த நிலையில்

இன்று உடற்கூறு ஆய்வு செய்வதற்கு வேறு மாவட்டத்திலிருந்து மருத்துவர்கள் வராத காரணத்தால் ஆக்கிரமடைந்த உறவினர்கள்

இரண்டாவது நாளாக அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர் தொடர்ந்து அரசு மாவட்ட தலைமை மகப்பேறு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதை அடுத்து அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது அதை தொடர்ந்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தி

இறந்த முத்துமாரியின் உடலை வருவாய்த்துறை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் தான் உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img