February 22, 2026, 8:07 AM
26.1 C
Chennai

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் குழந்தை தாய் பலி- உறவினர் மறியல்..

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் பிறந்த பெண் குழந்தை உயிர் இழப்பு தொடர்பாக உறவினர்கள் இன்று இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை பாரதி நகரைச் சார்ந்தவர் பன்னீர்செல்வம் (40) இவருடைய மனைவி முத்துமாரி (30) முத்துமாரியின் பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை காலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட முத்துமாரிக்கு நேற்று அதிகாலை பெண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் இறந்து பிறந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததாகவும் இதை தொடர்ந்து இறந்த குழந்தையின் உடலை பெற்ற உறவினர்கள் இறுதிச் சடங்கை முடித்து நிலையில் குழந்தை பிறந்ததிலிருந்து தாய் முத்துமாரியை உறவினர்கள் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில் முத்துமாரியை பார்க்க மாலை வரை மருத்துவ துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் அனுமதிக்காத நிலையில் தொடர்ந்து குடும்பத்தினர் பிரச்சனையில் ஈடுபட்டதை அடுத்து முத்துமாரி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரி உறவினர்கள் முத்துமாரியம்மன் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேறு மாவட்ட மருத்துவர்கள் வரவேண்டும் என கூறி கோரிக்கை வைத்திருந்தனர் இறப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் அளித்த நிலையில்

இன்று உடற்கூறு ஆய்வு செய்வதற்கு வேறு மாவட்டத்திலிருந்து மருத்துவர்கள் வராத காரணத்தால் ஆக்கிரமடைந்த உறவினர்கள்

இரண்டாவது நாளாக அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர் தொடர்ந்து அரசு மாவட்ட தலைமை மகப்பேறு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதை அடுத்து அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது அதை தொடர்ந்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தி

இறந்த முத்துமாரியின் உடலை வருவாய்த்துறை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் தான் உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories