January 19, 2025, 10:08 AM
25.7 C
Chennai

கௌதமி கூறிய புகாருக்கு விளக்கம் அளித்த கமல்!

சென்னை:
தனது நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்ததற்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக கௌதமி கூறிய புகாருக்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் எனது கம்பெனியில் இருக்கும் அதிகாரிகள் அதனைப் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்.

முன்னதாக, துபையில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்குக் கொண்டு வருவதில் கால தாமதம் ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் கமல்.

ஸ்ரீதேவியுடன் அதிக அளவிலான தமிழ்ப் படங்களில் ஜோடியாக நடித்தவர் கமல்ஹாசன். ஸ்ரீதேவியுடன் ரஜினிகாந்த்தும் அதிக அளவில் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீதேவி மரணத்துக்கு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற, ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் போனி கபூர் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். நடிகர் கமல்ஹாசன், பின்னர் சென்னைக்குத் திரும்பியுள்ளார்.

ALSO READ:  திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பு ரயில்!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‘ஸ்ரீதேவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி விட்டு வருகிறேன். ஐஐடி வளாகத்தில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது கண்டனத்துக்கு உரியது. தமிழ்த் தாய் வாழ்த்தை தமிழகத்தில் கண்டிப்பாக பாட வேண்டும்.’ என்று கூறினார்.

முன்னதாக, கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு நடிகர், நடிகைகள் சென்று போனி கபூரின் தம்பி அனில்கபூர் அவரது மனைவி சுனிதா, போனி கபூரின் தாயார், குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.