கௌதமி கூறிய புகாருக்கு விளக்கம் அளித்த கமல்!

சென்னை:
தனது நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்ததற்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக கௌதமி கூறிய புகாருக்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் எனது கம்பெனியில் இருக்கும் அதிகாரிகள் அதனைப் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்.

முன்னதாக, துபையில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்குக் கொண்டு வருவதில் கால தாமதம் ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் கமல்.

ஸ்ரீதேவியுடன் அதிக அளவிலான தமிழ்ப் படங்களில் ஜோடியாக நடித்தவர் கமல்ஹாசன். ஸ்ரீதேவியுடன் ரஜினிகாந்த்தும் அதிக அளவில் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீதேவி மரணத்துக்கு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற, ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் போனி கபூர் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். நடிகர் கமல்ஹாசன், பின்னர் சென்னைக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‘ஸ்ரீதேவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி விட்டு வருகிறேன். ஐஐடி வளாகத்தில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது கண்டனத்துக்கு உரியது. தமிழ்த் தாய் வாழ்த்தை தமிழகத்தில் கண்டிப்பாக பாட வேண்டும்.’ என்று கூறினார்.

முன்னதாக, கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு நடிகர், நடிகைகள் சென்று போனி கபூரின் தம்பி அனில்கபூர் அவரது மனைவி சுனிதா, போனி கபூரின் தாயார், குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories