பூணூல் அறுப்பு வெறுப்பு அரசியல்; மயிலை, திருவல்லிக்கேணியில் வன்முறையில் ஈடுபட்ட தபெதிக.,வினர் 4 பேர் கைது!

சென்னை:

இன்று லெனின், நாளை ஈ.வே.ரா., என்று கூறி, பின்னர் தன் கருத்தில் இருந்து பின்வாங்கிக் கொண்டார் ஹெச்.ராஜா. இந்தக் கருத்துக்காக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் காட்சி செய்தி ஊடகங்களின் கருத்துப் பரவலாக்கத்தால் கொதிப்படைந்த சிலர் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அப்பாவி பிராமணர்களின் பூணூலை அறுத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பேர் போலீஸில் சரணடைந்தனர். 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே, கடந்த காலங்களில் பார்ப்பன வெறுப்பு அரசியலை விதைத்து, அதன் வழியே திராவிட அரசியல் எனும் போர்வையில் இயங்கி வருகின்றனர் திராவிடர் கழகத்தினர். ஈ.வே.ரா., பெரியார், இளவயது பெண்ணை திருமணம் செய்த போது, அவருடைய கொள்கைகள் பிடிக்காமல் திமுக., எனும் கட்சியை தொடங்கி அண்ணாதுரை திராவிட அரசியல் களம் கண்டார். அவருக்குப் பின் மு.கருணாநிதியின் ஆதிக்கத்தில் இருந்த கட்சியில், கணக்கு கேட்டு பின் வெளியேற்றப் பட்டு, அதிமுக., எனும் கட்சியைக் கண்டார் எம்.ஜி.ஆர். அந்தத் திக.,வில் இருந்தே கணக்கு எனும் பிணக்கால் தி.க.வில் இருந்து தபெதிக., உருவாகி, பார்ப்பன எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலை நடத்தி வருகிறது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

tpdk members - 2026

ஏற்கெனவே, தனது கருத்தை வாபஸ் பெற்றுவிட்ட ஹெச்.ராஜாவைக் கண்டித்து, அவர் சார்ந்த பாஜக., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, பிராமணர் சங்கம் எனும் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் நாராயணன் என்பவரும் சங்கத்தின் பெயரில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், ஹெச்.ராஜாவின் கருத்தை கண்டிப்பதாகக் கூறினார். அதற்கு பலனாக, இன்று மயிலாப்பூர், திருவல்லிக்கேணியில், தபெதிக.,வினர் 8 பேர் கொலை வெறியுடன் தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் சுற்றி, கண்ணில் பட்ட அப்பாவி பிராமணர்களின் பூணூலை அறுத்துள்ளனர்.

4 இரு சக்கர வாகனங்களில் வந்த வெறியர்களின் தாக்குதலுக்கு பயந்து பாதிக்கப்பட்டவர்கள் ஓடிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் போலீஸாருக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து, நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் குறித்து விசாரித்தனர்.

இதையடுத்து அவர்களது படங்களை போலீஸார் வெளியிட்டனர். போலீஸார் வெளியிட்ட படங்களில் இருப்பவர்கள் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எனபது தெரிய வந்தது. இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த பெரியார் திராவிட கழக அமைப்பினரில் பிரபாகரன், ராவணன், உமாபதி, ராஜேஷ் ஆகிய நான்கு பேர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆணையர் வினோத் முன்பு சரணடைந்தனர். சரணடைந்த 4 பேர் தவிர மீதமுள்ள 4 பேரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories