கமல் குறித்த கௌதமியின் புகாரில் அர்த்தங்கள் பல உள்ளன: ஜெயக்குமார் ‘உள்குத்து’

kamal hassan gautami subbulakshmi - 2026

சென்னை:
நடிகர் கமல்ஹாசன் இப்போது மக்கள் நீதி மய்யம் என புதிய கட்சி அமைப்பைத் துவங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் டிவிட்டர் பதிவுகளில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். அப்போதெல்லாம் அவர் சர்ச்சைகளுக்கு ஆளானார்.

குறிப்பாக, சமூகத்தைப் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு அரசியல் களத்தில் குதித்த கமலுக்கு, தனிப்பட்ட வாழ்க்கை சரியாக இல்லை என்று கருத்துகள் எழுப்பப் பட்டன. மனைவிகளுடன் சரியாக வாழத் தெரியாதவர் மக்களை எப்படி கவனிப்பார் என்று விமர்சனம் முன்வைக்கப் பட்டது. இதை நாசூக்காக வெளிப்படுத்தினார் மூத்த நடிகரும் இயக்குனருமான விசு. தனிமைப் பட்டுப் போனதால் கமல்ஹாசனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது செய்யட்டும் என்று அரசல் புரசல் கருத்தைத் தெரிவித்தார்.

இதற்குக் காரணம், கமலுடன் அண்மைக் காலம் வரை உடன் இருந்து பிரிந்து சென்ற நடிகை கௌதமி, அவர் மீது சில குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். தாங்கள் ஏன் கமல்ஹாசனைப் பிரிகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட போது, தனது மகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருதி ஒரு முடிவு எடுத்ததாகச் சொன்னார். கௌதமியின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், கமல்ஹாசனின் கட்சி குறித்தும் அவரது அரசியல் குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மகள் பாதுகாப்பு கருதி, கமலிடம் இருந்து பிரிந்ததாக கௌதமி கூறியதில் பல அர்த்தங்கள் உள்ளன” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அவர் சொன்ன அர்த்தம் என்ன என்பது குறித்து ஜெயக்குமார் மேலும் விளக்கவில்லை.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories