கமல் குறித்த கௌதமியின் புகாரில் அர்த்தங்கள் பல உள்ளன: ஜெயக்குமார் ‘உள்குத்து’

kamal hassan gautami subbulakshmi - 2026

சென்னை:
நடிகர் கமல்ஹாசன் இப்போது மக்கள் நீதி மய்யம் என புதிய கட்சி அமைப்பைத் துவங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் டிவிட்டர் பதிவுகளில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். அப்போதெல்லாம் அவர் சர்ச்சைகளுக்கு ஆளானார்.

குறிப்பாக, சமூகத்தைப் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு அரசியல் களத்தில் குதித்த கமலுக்கு, தனிப்பட்ட வாழ்க்கை சரியாக இல்லை என்று கருத்துகள் எழுப்பப் பட்டன. மனைவிகளுடன் சரியாக வாழத் தெரியாதவர் மக்களை எப்படி கவனிப்பார் என்று விமர்சனம் முன்வைக்கப் பட்டது. இதை நாசூக்காக வெளிப்படுத்தினார் மூத்த நடிகரும் இயக்குனருமான விசு. தனிமைப் பட்டுப் போனதால் கமல்ஹாசனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது செய்யட்டும் என்று அரசல் புரசல் கருத்தைத் தெரிவித்தார்.

இதற்குக் காரணம், கமலுடன் அண்மைக் காலம் வரை உடன் இருந்து பிரிந்து சென்ற நடிகை கௌதமி, அவர் மீது சில குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். தாங்கள் ஏன் கமல்ஹாசனைப் பிரிகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட போது, தனது மகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருதி ஒரு முடிவு எடுத்ததாகச் சொன்னார். கௌதமியின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், கமல்ஹாசனின் கட்சி குறித்தும் அவரது அரசியல் குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மகள் பாதுகாப்பு கருதி, கமலிடம் இருந்து பிரிந்ததாக கௌதமி கூறியதில் பல அர்த்தங்கள் உள்ளன” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அவர் சொன்ன அர்த்தம் என்ன என்பது குறித்து ஜெயக்குமார் மேலும் விளக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories