சென்னை: பெரியார் மண் என்று கூறும், மு.க.ஸ்டாலின், திமுக., ஆட்சியில் இருந்த போது ஏன் இந்து சமய அறநிலையத்துறையை நிர்வகித்தது என்ற கேள்வி எழுப்பப் படுகிறது.
ஆட்சியில் இருப்போர் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சார்பு, ஒரு கொள்கை, ஒரு மத ஆதரவு, ஒரு சாதி ஆதரவு என மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் இயங்குவது, மோதல்களுக்கே வழி வகுக்கும். மு.க.ஸ்டாலின் அந்த விதத்தில்தான் அரசியல் நடத்தி வருகிறார்.
மற்ற மாநிலங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை, இது பெரியார் மண். எங்களுக்கு உணர்வு இருப்பதால் நாங்கள் எதிர்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அப்படி என்றால், அதே உணர்வு, இது ஆழ்வார்கள் மண், இது நாயன்மார்கள் மண் என்று சொல்லி ஆண்டாண்டு காலமாக வளர்ந்தவர்களுக்கு இருக்காதா அல்லது இருக்கக் கூடாதா? ஆன்மிகம் தழைத்த இந்தத் தமிழ் மண்ணில் நாத்திகக் கருத்துகளுடன் ஸ்டாலினோ அல்லது திமுக.,வினரோ இருப்பதை எந்த ஆத்திகரும் ஆட்சேபிப்பதில்லை. அது அவரவர் அரசியல் என்று விட்டு விலகும் போது, அமைதியாகச் சென்று கொண்டிருக்கக் கூடிய ஒரு ரத யாத்திரையை, செல்லவே கூடாது என்று தடுத்த நிறுத்து, மதக் கலவரத்தைத் தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?
இந்தக் கருத்துகளின் பின்னணியில் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில்,
இந்த மண்லதான் அரசு நிர்வஹிக்கும் 58 ஆயிரம் கோயில்கள் உள்ளது. உண்டியல் பணம், கோயில் சொத்து வேணும். ஆனா சாமி வேணாமாம். வெங்காயம்.
– என்று கேட்டுள்ளார்.
இந்த மண்லதான் அரசு நிர்வஹிக்கும் 58 ஆயிரம் கோயில்கள் உள்ளது. உண்டியல் பணம், கோயில் சொத்து வேணும். ஆனா சாமி வேணாமாம். வெங்காயம். https://t.co/3POoThpHcL
— S.VE.SHEKHER (@SVESHEKHER) March 20, 2018