அன்வர் ராஜா மகன் திருமணம்: அழுது தீர்த்த அபலைப் பெண்ணால் ஜமாத் நிறுத்தி வைப்பு!

.anwar raja son marriage issue - 2026
காரைக்குடி: அதிமுக., எம்.பி. அன்வார் ராஜாவின் மகன் திருமணத்துக்கு எதிராக, பள்ளிவாசல் மீது பாதிக்கப்பட்ட பெண் போராட்டம் நடத்தினார். இதனால் ஜமாத்தார், அன்வர் ராஜாவின் மகனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி வைத்தனர்.

அதிமுக எம்பி., அன்வர் ராஜாவின் மகன் நாசர் மீது சென்னையைச் சேர்ந்த ரொபினா என்ற பெண், இரு தினங்களுக்கு முன் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், அன்வர் ராஜாவின் மகன் நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 3 வருடம் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றி விட்டதாகவும், தன்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை அடகு வைத்து கடன் கொடுத்திருப்பதாகவும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

மேலும், தன்னை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணை நாசர் மார்ச் 25ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டால் நாசரும் அவரது தந்தை அன்வர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் அவர் அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

இதனிடையே, மார்ச் 25 இன்று காரைக்குடி காலேஜ் பள்ளிவாசலில் நாசருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அங்கே சென்ற ரொபினா, நாசர் தன்னை ஏமாற்றியது குறித்து ஜமாத்தாரிடம் புகார் கூறி, அழுது புலம்பினார். சுவரில் முட்டி மோதிக் கொண்டு அழுது தீர்த்தார். சுவரில் முட்டி மோதி அழுத ரொபினா, பின்னர் பள்ளிவாசல் மண்டபத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரது அழுகையும் கூக்குரலும் ஜமாத்தாரை வேறு விதமாக முடிவு எடுக்கத் தூண்டியது. இதையடுத்து ரொபினாவின் புகாரை ஏற்று நாசரின் திருமணத்தை ஜமாத் நிறுத்தி வைத்தது.

ஒரு முடிவுக்கு வராத நிலையில், காரைக்குடியில் எந்த பள்ளிவாசலிலும் நாசருக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில்லை என்று ஜமாத் முடிவு செய்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories