
சென்னை: தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜக.,வுக்கு சிறிதளவும் இல்லை என பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காவிரில் தமிழக உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க, முனைப்பாக உள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும். அது பா.ஜ.க,வால் மட்டுமே முடியும். நெடுநாளைய பிரச்னையை உடனே தீர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன” என்று கூறினார்.



