மெரினாவில் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 15 பேர் கைது!

Published:

IMG 20180331 WA0039 - 2026

சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 15 இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர்.

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 15 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காவிரி உரிமைக்காகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை மெரினாவில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 15 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, மெரினாவில் காவிரிக்காக போராடியவர்கள் யார்? என்பது குறித்த போட்டோக்களை வைத்து உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

IMG 20180331 WA0043 - 2026

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பேஸ்புக்கில் தங்கள் படங்களை பதிவு செய்து, இணைந்து மெரினாவில் போராட்டம் நடத்திய மக்களை போலீசார் தேடினர்.

IMG 20180331 WA0040 - 2026

மெரினாவில் 30க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்திய புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை துவக்கி, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img