சென்னை: காவிரி விவகாரம் பதற்றத்தை அதிகரித்துள்ள சூழலில் தில்லி விரைகிறார் தமிழக ஆளுநர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுதும் பரவலாக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மத்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் இன்று இரவு 7:10 விமானத்தில் தில்லி விரைகிறார் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்.
முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர் அரசு தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.