நெல்லையில் “சேவா பாரதி” நிர்வாகி வெட்டிக் கொலை

Published:

திருநெல்வேலி: நெல்லை அருகே சேவாபாரதி அமைப்பின் மூலம் சமூக சேவையில் ஈடுபட்டு வந்த சமூக சேவகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நெல்லை அருகே மேலப்பாளையம் – குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(55). திருமணமாகாத இவர் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்தார். விவசாய சங்க தலைவராகவும் இருந்த இவர், சேவா பாரதி இயக்கத்தி்ன் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இவர் தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்னறனர்.

Related articles

Recent articles

spot_img