February 22, 2026, 1:55 PM
29.6 C
Chennai

பயன் தாராத பண்டம் போல் வாழ்க்கை!

avvai ஏனோ தெரியவில்லை… இன்று காலை… துயில் கலைந்த வேளை … வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் – வார்த்தைதான் ரீங்காரமிட்டது. ஔவைப் பாட்டியின் அபிநயம். அழகுச் சொல்லால் விரல் பிடித்து ஆடிய நர்த்தனம். பெண்பாவைப் பருவம் மறுத்து வெண்பாவால் விளையாட்டாய்ச் சொன்ன மூதாட்டியின் மூதுரைதான் நெஞ்சில் அலையோடியது! கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியென எதுவோ எதையோ பார்த்து சூடு போட்ட கதையைக் காட்சிப் படுத்திய அந் நேரம்…. இன்னொன்றும் என் சிந்தையை பலமாய் உலுக்கியது! நாட்கள் நகர்கின்றன… வேகமாய்ச் சுற்றும் பூமி… அதே வேகத்தில் …. வயோதிகத்தின் அருகே வலியத்தான் அழைத்துச் செல்கிறது… மரணத்தின் அருகில் விரல் பிடித்து இழுத்துச் செல்கிறது… காலம் கடந்த வேளை…. திரும்பிப் பார்த்தால் – எல்லாம் வெறுமை! பிறர்க்குப் பயன் தரும் விதமாய்… அண்மைக் காலமாய்… என்னால் எதுவுமே அமையவில்லை! சிறகடித்துப் பறக்கும் நேரம் சிறகொடிந்து கிடக்கும் பாரம்… நெஞ்சை அழுத்துகிறது! ஔவைப் பாட்டி மேலும் கிளறிவிட்டாள்… இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியவும் – இன்னாத நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு வறுமை வந்து எய்திய காலை இளமை இன்னாதது… கொடிது கொடிது இளமையில் வறுமை! வறுமை – இளமைப் பருவத்தே துன்பம் தருவது… இன்னா அளவெனில்… முதுமைப் பருவம்! அப்பருவத்தே இன்பம் தர வேண்டியனவும் துன்பமே தருமாம்! ஆம் ஔவையே! முதல்பாதியை நான் அனுபவித்து விட்டேன்… பின்னது நோக்கி வருங்காலம் அழைக்கிறது! பார்த்துவிடுகிறேன்! நாள் அல்லா நாள் பூத்த நல் மலர் போல்! தேவைக்குப் பயன்படும் சுப வேளை… மலர் தேடி அலையும் போது…. பூத்துச் சிரித்து, பூத்ததற்கேயான பயனைத் தராத மலரைப் போல் – ஆள் இல்லா மங்கைக்கு அழகு! பார்த்து ரசித்து… அன்பையும் அழகையும் அனுபவிக்க வேண்டிய கணவனிலா இளம்பெண் பெற்ற அழகைப் போல்! நான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories