பயன் தாராத பண்டம் போல் வாழ்க்கை!

avvai ஏனோ தெரியவில்லை… இன்று காலை… துயில் கலைந்த வேளை … வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் – வார்த்தைதான் ரீங்காரமிட்டது. ஔவைப் பாட்டியின் அபிநயம். அழகுச் சொல்லால் விரல் பிடித்து ஆடிய நர்த்தனம். பெண்பாவைப் பருவம் மறுத்து வெண்பாவால் விளையாட்டாய்ச் சொன்ன மூதாட்டியின் மூதுரைதான் நெஞ்சில் அலையோடியது! கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியென எதுவோ எதையோ பார்த்து சூடு போட்ட கதையைக் காட்சிப் படுத்திய அந் நேரம்…. இன்னொன்றும் என் சிந்தையை பலமாய் உலுக்கியது! நாட்கள் நகர்கின்றன… வேகமாய்ச் சுற்றும் பூமி… அதே வேகத்தில் …. வயோதிகத்தின் அருகே வலியத்தான் அழைத்துச் செல்கிறது… மரணத்தின் அருகில் விரல் பிடித்து இழுத்துச் செல்கிறது… காலம் கடந்த வேளை…. திரும்பிப் பார்த்தால் – எல்லாம் வெறுமை! பிறர்க்குப் பயன் தரும் விதமாய்… அண்மைக் காலமாய்… என்னால் எதுவுமே அமையவில்லை! சிறகடித்துப் பறக்கும் நேரம் சிறகொடிந்து கிடக்கும் பாரம்… நெஞ்சை அழுத்துகிறது! ஔவைப் பாட்டி மேலும் கிளறிவிட்டாள்… இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியவும் – இன்னாத நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு வறுமை வந்து எய்திய காலை இளமை இன்னாதது… கொடிது கொடிது இளமையில் வறுமை! வறுமை – இளமைப் பருவத்தே துன்பம் தருவது… இன்னா அளவெனில்… முதுமைப் பருவம்! அப்பருவத்தே இன்பம் தர வேண்டியனவும் துன்பமே தருமாம்! ஆம் ஔவையே! முதல்பாதியை நான் அனுபவித்து விட்டேன்… பின்னது நோக்கி வருங்காலம் அழைக்கிறது! பார்த்துவிடுகிறேன்! நாள் அல்லா நாள் பூத்த நல் மலர் போல்! தேவைக்குப் பயன்படும் சுப வேளை… மலர் தேடி அலையும் போது…. பூத்துச் சிரித்து, பூத்ததற்கேயான பயனைத் தராத மலரைப் போல் – ஆள் இல்லா மங்கைக்கு அழகு! பார்த்து ரசித்து… அன்பையும் அழகையும் அனுபவிக்க வேண்டிய கணவனிலா இளம்பெண் பெற்ற அழகைப் போல்! நான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories