February 20, 2026, 11:16 AM
30 C
Chennai

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

nirmala devi prof - 2026

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலாதேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து புகாரைப்பெற்றுக் கொண்ட போலீஸார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி மாணவியர் நால்வரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, அதிகாரிகள் சிலருக்கு அனுசரணையாக நடந்து கொண்டால், நல்ல மதிப்பெண்கள், கைநிறைய பணம் கிடைக்கும் என்று கூறி ஆசை காட்டினார். இந்த உரையாடல், ‘வாட்ஸ் ஆப்’பில் வைரலாகப் பரவியது. இவ்வாறு மாணவிகளிடம் தவறாகப் பேசிய பேராசிரியையைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் மாதர் சங்கத்தினர் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

சம்பந்தப் பட்ட பேராசிரியை மீது போலீசில் புகார் அளிக்குமாறு கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கேட்டுக் கொண்டதை அடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் தாசில்தார் கார்த்திகேயனிடம் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி., தனபாலிடம் , கல்லூரி முதல்வர் பாண்டியராஜன், மாதர் சங்கத்தினர் இணைந்து புகார் அளித்தனர். மேலும் இது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., தனபால் கூறினார்.

professor nirmala - 2026

இதனிடையே மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலாவை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி வீட்டைச் சுற்றி போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டனர். தாசில்தார் உள்பட டிஎஸ்பி ஆகியோர் பேராசிரியை வீட்டுக்குச் சென்றபோது, கதவு உள்பூட்டு போடப்பட்டிருந்ததால் அவரது உறவினர்கள் முன்னிலையில் கதவைத் திறக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதனிடையே கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பேராசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதி இதனைத் தெரிவித்தார்.

மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி பல்கலை., பெரிய மனிதர்களுக்கு இரையாக்க பேரம் நடத்தும் பேராசிரியை குறித்த வைரல் ஆடியோ பதிவு…. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories