February 21, 2026, 6:10 PM
29 C
Chennai

ஆளுநரின் செயல்பாடுகள் கவனம் கொள்ளுமா மத்திய அரசு ? ஜி.கே.வாசன்

gk vasan9 600 10 1491821923 - 2026

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளதை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் .வலியுறுத்தல் இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று  வெளியிட்டுள்ள  அறிக்கையில், ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் தொடர் செயல்பாடுகளை, நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாகவே எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சிப்பதும், எதிர்ப்பதும் மட்டுமல்ல பல்வேறு நிலைகளிலே ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் அதிருப்தியை தெரிவிப்பதும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
இருப்பினும் ஆளுநரின் செயல்பாடுகள் சம்பந்தமாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே ஆளுநரின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சந்தேகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
குறிப்பாக மாவட்டங்களுக்கு ஆய்வுக்காக சென்றதிலும், துணை வேந்தர் லஞ்சம் பெற்றது தொடர்பான நடவடிக்கையிலும், துணை வேந்தரை நியமனம் செய்ததிலும், அதனைத் தொடர்ந்து இப்போது அருப்புக்கோட்டை துணை பேராசிரியை நிர்மலா தேவியின் குற்றச்செயல் மீதான அவசர நடவடிக்கையாக ஒரு நபர் விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்டதிலும், இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையும் ஆளுநருக்கு எதிராகவே அமைந்துள்ளது.
இவ்வாறு ஆளுநர் தெளிவற்ற, அவசரமான தனது தொடர் செயல்பாட்டால் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்பட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நல்ல நிகழ்வாக அமையவில்லை.
மேலும் ஆளுநரின் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவோ, எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ அமைந்துவிடாமல் பொது மக்கள் நலன் காக்கும் விதத்திலும், மாநில முனேற்றத்திற்கு உதவிடும் வகையிலும் அமைய வேண்டும். எனவே ஆளுநரின் தொடர் செயல்பாட்டின் காரணமாக எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories