February 21, 2026, 8:18 PM
27.3 C
Chennai

அத்வானிக்கு குண்டு வெச்சோம்; இப்போ மோடியை கொல்ல போறோம்… எங்களை பத்தி போலீஸுக்கு நல்லா தெரியும்!

murder threat to modi - 2026

அத்வானிக்கு குண்டு வெச்சோம், இப்போ மோடியைக் கொல்லப் போறோம்… எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எங்களைப் பத்தி போலீசுக்கு நல்லாவே தெரியும்… – இப்படித்தான் ஒருவர் செல்போனில் தெனாவெட்டாக உண்மையை உளறியிருக்கிறார். சொல்லப் போனால், இந்து இயக்கங்கள் இதைத்தான் வெகு காலமாக சொல்லி வருகின்றன.

வரிசையாக இந்து இயக்கத்தவர்களை கொலை செய்து விட்டு, மாட்டினாலும் குறுகிய காலம் சிறையில் இருந்துவிட்டு, அடுத்த ஆளைப் போட்டுத் தள்ள திட்டம் தீட்டிக் கொண்டிருப்பவர்கள் குறித்து எவ்வளவோ சொல்லி வருகிறார்கள். ஆனாலும் போலீஸார் பெரிதாக கண்டு கொள்வதில்லை. இப்போதும் கூட, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்தவர், மீண்டும் அப்படி ஒரு பயங்கரத்தை நிகழ்த்தப் போவதாகக் கூறியிருக்கிறார். ஆனாலும் போலீஸார், வழக்கம் போல், அவர் மிரட்டல் விடுப்பது உண்மையாகத் தானா என்று விசாரணைசெய்து வருகிறார்களாம்!

சேலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது 3 கார்களை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்த கார்களை மீட்க மேட்டுப்பாளையம் சென்றார். அப்போது அந்த நபர், கோவையைச் சேர்ந்த 50 வயதான ரபீக்கிடம், நீங்கள் ரூ.4 லட்சம் கொடுத்து கார்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பிரகாஷ், ரபீக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் இருவரும் பேசிய 8 நிமிடங்கள் கொண்ட ஆடியோ, வாட்ஸ்-அப், முகநூல் உள்பட சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

அந்த உரையாடலில், நாங்கள் பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டுள்ளோம் என ரஃபீக் பேசுவது பதிவாகியிருந்தது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த உரையாடல் குறித்து தெரிய வந்ததும், போலீசார் அந்த ஆடியோவை பதிவிறக்கம் செய்து உரையாடலைக் கேட்டனர். அதைக் கேட்டதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த ஆடியோவில் ரபீக் பேசியிருப்பது குறித்து போலீசார் தெரிவித்தவை:-

‘நாங்கள் தமிழகத்தில் உள்ள பல சிறைகளுக்குச் சென்று வந்தவர்கள். யாருக்கும் பயப்பட மாட்டோம். கார்களுக்கு கடன் கொடுப்பவர்களை நாங்கள் விடுவதில்லை. அவர்களிடம் இருந்து பல கார்களை வாங்கி உடைத்துள்ளோம்.

எங்களைப் பற்றி போலீசாருக்கு நன்றாகத் தெரியும். எந்த கொம்பனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கெனவே நாங்கள் அத்வானியை கொல்ல குண்டு வைத்தோம். தற்போது பிரதமர் மோடியையும் கொல்ல திட்டமிட்டுள்ளோம். என் மீது 22 வழக்குகள் உள்ளன. 160 கார்களை உடைத்துள்ளோம். ஆனால் எங்களை யாரும் கைது செய்யவில்லை…

இவ்வாறு ரஃபீக் பேசியுள்ளார். இதையடுத்து ரஃபீக் மீது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும்படி பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று இரவு கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ரஃபீக் ஏற்கெனவே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 2007ஆம் ஆண்டில் விடுதலையானவர். அவர் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் 2014ஆம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அவர் உண்மையிலேயே பிரதமரை கொல்ல திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories