அத்வானிக்கு குண்டு வெச்சோம்; இப்போ மோடியை கொல்ல போறோம்… எங்களை பத்தி போலீஸுக்கு நல்லா தெரியும்!

murder threat to modi - 2026

அத்வானிக்கு குண்டு வெச்சோம், இப்போ மோடியைக் கொல்லப் போறோம்… எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எங்களைப் பத்தி போலீசுக்கு நல்லாவே தெரியும்… – இப்படித்தான் ஒருவர் செல்போனில் தெனாவெட்டாக உண்மையை உளறியிருக்கிறார். சொல்லப் போனால், இந்து இயக்கங்கள் இதைத்தான் வெகு காலமாக சொல்லி வருகின்றன.

வரிசையாக இந்து இயக்கத்தவர்களை கொலை செய்து விட்டு, மாட்டினாலும் குறுகிய காலம் சிறையில் இருந்துவிட்டு, அடுத்த ஆளைப் போட்டுத் தள்ள திட்டம் தீட்டிக் கொண்டிருப்பவர்கள் குறித்து எவ்வளவோ சொல்லி வருகிறார்கள். ஆனாலும் போலீஸார் பெரிதாக கண்டு கொள்வதில்லை. இப்போதும் கூட, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்தவர், மீண்டும் அப்படி ஒரு பயங்கரத்தை நிகழ்த்தப் போவதாகக் கூறியிருக்கிறார். ஆனாலும் போலீஸார், வழக்கம் போல், அவர் மிரட்டல் விடுப்பது உண்மையாகத் தானா என்று விசாரணைசெய்து வருகிறார்களாம்!

சேலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது 3 கார்களை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்த கார்களை மீட்க மேட்டுப்பாளையம் சென்றார். அப்போது அந்த நபர், கோவையைச் சேர்ந்த 50 வயதான ரபீக்கிடம், நீங்கள் ரூ.4 லட்சம் கொடுத்து கார்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பிரகாஷ், ரபீக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் இருவரும் பேசிய 8 நிமிடங்கள் கொண்ட ஆடியோ, வாட்ஸ்-அப், முகநூல் உள்பட சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

அந்த உரையாடலில், நாங்கள் பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டுள்ளோம் என ரஃபீக் பேசுவது பதிவாகியிருந்தது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த உரையாடல் குறித்து தெரிய வந்ததும், போலீசார் அந்த ஆடியோவை பதிவிறக்கம் செய்து உரையாடலைக் கேட்டனர். அதைக் கேட்டதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த ஆடியோவில் ரபீக் பேசியிருப்பது குறித்து போலீசார் தெரிவித்தவை:-

‘நாங்கள் தமிழகத்தில் உள்ள பல சிறைகளுக்குச் சென்று வந்தவர்கள். யாருக்கும் பயப்பட மாட்டோம். கார்களுக்கு கடன் கொடுப்பவர்களை நாங்கள் விடுவதில்லை. அவர்களிடம் இருந்து பல கார்களை வாங்கி உடைத்துள்ளோம்.

எங்களைப் பற்றி போலீசாருக்கு நன்றாகத் தெரியும். எந்த கொம்பனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கெனவே நாங்கள் அத்வானியை கொல்ல குண்டு வைத்தோம். தற்போது பிரதமர் மோடியையும் கொல்ல திட்டமிட்டுள்ளோம். என் மீது 22 வழக்குகள் உள்ளன. 160 கார்களை உடைத்துள்ளோம். ஆனால் எங்களை யாரும் கைது செய்யவில்லை…

இவ்வாறு ரஃபீக் பேசியுள்ளார். இதையடுத்து ரஃபீக் மீது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும்படி பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று இரவு கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ரஃபீக் ஏற்கெனவே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 2007ஆம் ஆண்டில் விடுதலையானவர். அவர் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் 2014ஆம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அவர் உண்மையிலேயே பிரதமரை கொல்ல திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories