தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: நாளை வெளியிட வாய்ப்பு

Published:

madras high court - 2026

சென்னை: தினகரன் தரப்பு 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும் சனிக்கிழமை வெளியிட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, இன்று முதலில், சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது.

அதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் தகுதி நீக்க வழக்கு குறித்த தீர்ப்பு வெளியாகிறது. இதனால், சென்னை உயர்நீதிமன்ற வளாகமே பெரும் பரபரப்புடனும், கூட்ட நெரிசலுமாகக் காணப்படுகிறது.

முக்கிய இரு வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதால் நிரம்பி வழிகிறது நீதிமன்ற வளாகம். அதிமுக, திமுக வழக்கறிஞர்கள் ஒரு புறம் என்றால், சட்டக்கல்லுரி மாணவர்கள் ஒரு புறத்தில் குவிந்துள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img