அறிவாலயத்தை சட்ட மன்றமாக்கி… முதல்வர் நாற்காலியில் கற்பனையாகவாவது அமர ஆசைப்படும் ஸ்டாலின்!

m k stalin dmk - 2026

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம் மற்றும் போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவியதாக முதலமைச்சர் கூறுவது போராட்டக் காரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று குறிப்பிட்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக., தலைமையகமான அறிவாலயத்தையே சட்டமன்றமாக்கி, கற்பனையாக அவை அலுவல்கள் நடப்பதைப் போல், போட்டி சட்டமன்றக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருந்துவரும் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக, துணை முதல்வராக, சென்னை மேயராக என்று பதவிகளில் இருந்துவிட்டார். ஆனால், அவருக்கு தமிழக முதல்வர் நாற்காலியில் அமரும் யோகம் மட்டும் இதுவரை அமையவே இல்லை. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது, திமுக., வென்று ஸ்டாலின் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அப்போது திமுக.,வில் உட்கட்சிப் பூசல் தலை தூக்கியிருந்தது.

மதுரையை மையமாகக் கொண்டு மு.க.அழகிரியும் சென்னையை மையமாகக் கொண்டு ஸ்டாலினும் திமுக,வில் கோலோச்சியபோது, ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அழகிரியை கட்சியை விட்டு நீக்கினார் திமுக., தலைவர் கருணாநிதி. இப்படி குடும்பச் சண்டையால், திமுக.,வின் வெற்றி பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக, தனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியும் என்று பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தார் கருணாநிதி.

ஆனால் எதிர்பார்த்தற்கு மாறாக, அந்தத் தேர்தலில் திமுக., தோற்றது. இதனால் தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர விரும்பாமல், ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை விட்டுக் கொடுத்து, உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிப்போனார். ஆனால் ஸ்டாலினுக்கோ, இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் தம்மால் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லையே என்ற ஏக்கத்தில், தாம் என்ன செய்கிறோம் என்ற எந்தத் திட்டமிடலும் தெரியாமலேயே, ஏதோ அரசியலில் ஈடுபட்டு, முதல்வர் நாற்காலி அடுத்து தனக்குத்தான் என்ற ஆசையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

மக்களிடம் பெரிய அளவுக்கு கவர்ச்சியோ, அறிமுகமோ இல்லாத எடப்பாடி பழனிசாமி எல்லாம் முதலமைச்சர் ஆகும் போது, தம்மால் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் ஸ்டாலினிடம் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தைக் கைப்பற்றும் அதி தீவிர முயற்சியில் எத்தனையோ வழிகளைக் கையாண்டு பார்த்து விட்டார். எல்லாம் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

அதற்காகத்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள். எல்லாவற்றிலும் திமுக.,வினர் பின்னணியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி கலவரமும் கூட திமுக., பெயரைத் தாங்கிக் கொண்டுள்ளது. முதல்வர் எடப்பாடி இது குறித்து இன்று பேரவையில் குற்றம் சாட்டுகையில், தூத்துக்குடி கலவரத்தின் பின் திமுக., இருந்தது என்றார்.

இந்நிலையில், தூத்துக்குடி கலவரத்தில் காவலர்கள் செய்தவை குறித்து ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு எடப்பாடி பழனிசாமி கூறியதால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்தப் போவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்தார் ஸ்டாலின்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories