அறிவாலயத்தை சட்ட மன்றமாக்கி… முதல்வர் நாற்காலியில் கற்பனையாகவாவது அமர ஆசைப்படும் ஸ்டாலின்!

m k stalin dmk - 2026

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம் மற்றும் போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவியதாக முதலமைச்சர் கூறுவது போராட்டக் காரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று குறிப்பிட்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக., தலைமையகமான அறிவாலயத்தையே சட்டமன்றமாக்கி, கற்பனையாக அவை அலுவல்கள் நடப்பதைப் போல், போட்டி சட்டமன்றக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருந்துவரும் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக, துணை முதல்வராக, சென்னை மேயராக என்று பதவிகளில் இருந்துவிட்டார். ஆனால், அவருக்கு தமிழக முதல்வர் நாற்காலியில் அமரும் யோகம் மட்டும் இதுவரை அமையவே இல்லை. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது, திமுக., வென்று ஸ்டாலின் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அப்போது திமுக.,வில் உட்கட்சிப் பூசல் தலை தூக்கியிருந்தது.

மதுரையை மையமாகக் கொண்டு மு.க.அழகிரியும் சென்னையை மையமாகக் கொண்டு ஸ்டாலினும் திமுக,வில் கோலோச்சியபோது, ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அழகிரியை கட்சியை விட்டு நீக்கினார் திமுக., தலைவர் கருணாநிதி. இப்படி குடும்பச் சண்டையால், திமுக.,வின் வெற்றி பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக, தனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியும் என்று பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தார் கருணாநிதி.

ஆனால் எதிர்பார்த்தற்கு மாறாக, அந்தத் தேர்தலில் திமுக., தோற்றது. இதனால் தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர விரும்பாமல், ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை விட்டுக் கொடுத்து, உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிப்போனார். ஆனால் ஸ்டாலினுக்கோ, இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் தம்மால் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லையே என்ற ஏக்கத்தில், தாம் என்ன செய்கிறோம் என்ற எந்தத் திட்டமிடலும் தெரியாமலேயே, ஏதோ அரசியலில் ஈடுபட்டு, முதல்வர் நாற்காலி அடுத்து தனக்குத்தான் என்ற ஆசையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

மக்களிடம் பெரிய அளவுக்கு கவர்ச்சியோ, அறிமுகமோ இல்லாத எடப்பாடி பழனிசாமி எல்லாம் முதலமைச்சர் ஆகும் போது, தம்மால் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் ஸ்டாலினிடம் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தைக் கைப்பற்றும் அதி தீவிர முயற்சியில் எத்தனையோ வழிகளைக் கையாண்டு பார்த்து விட்டார். எல்லாம் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

அதற்காகத்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள். எல்லாவற்றிலும் திமுக.,வினர் பின்னணியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி கலவரமும் கூட திமுக., பெயரைத் தாங்கிக் கொண்டுள்ளது. முதல்வர் எடப்பாடி இது குறித்து இன்று பேரவையில் குற்றம் சாட்டுகையில், தூத்துக்குடி கலவரத்தின் பின் திமுக., இருந்தது என்றார்.

இந்நிலையில், தூத்துக்குடி கலவரத்தில் காவலர்கள் செய்தவை குறித்து ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு எடப்பாடி பழனிசாமி கூறியதால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்தப் போவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்தார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories