தனியார் பள்ளிகள் குறித்த சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

Published:

08 June09 Minister sengottioan - 2026

சென்னை: தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டத் திருத்த மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம்,  தனியார் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், கல்வியை வியாபாரமயம் ஆக்குதலைத் தடுத்தல், முறையாக சான்றிதழ் பெறாத பள்ளிகளை நடத்துவதற்கு தடை விதித்தல்,  உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும், சிபிஎஸ்இ பள்ளிகள் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழக அரசிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்று கூறினார் செங்கோட்டையன்.

தனியார் பள்ளிகள் வேலை நேரத்தில் நீட் பயிற்சி வழங்கினால் அவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், பள்ளி நேரம் முடிந்தோ அல்லது விடுமுறை நாட்களிலோ நீட் பயிற்சி அளிக்கலாம் என்று கூறினார் செங்கோட்டையன்.

தொடர்ந்து, சிவ் நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகிய புதிய தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேரவையில் தாக்கல் செய்தார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

மேலும்,  தனியார் சட்டக் கல்லூரிகள் நிறுவுவதற்கான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார்.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img