அஞ்சு பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி கைது!

murder - 2026

ஈரோட்டில் 5 பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி நேற்று கைது செய்யப் பட்டார். பாறாங் கற்களால் சடலத்தை மறைக்க முயற்சி செய்தும் கண்டுபிடித்தது போலீஸ்!

ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தனசேகர் (24). இவர் நிரந்தர வேலையில்லாமல் கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார்.

இதே காலனியில் வசிக்கும் ஆறுமுகம் மனைவி சிந்து (27). ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்திலும், சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் பணியாற்றினர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தனசேகர், சிந்துவுக்கு தம்பி முறை உறவினர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனசேகரிடம் ஆறுமுகம் குடும்பச் செலவுக்கு ரூ.5000 கடனாகக் கேட்டுள்ளார். அவரும் ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலை, ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர், `தோப்பு பாளையத்தில் நண்பர் ஒருவர் பணம் தருவதாக சொல்லியிருக்கிறார். நீங்களோ அல்லது சிந்துவோ நேரில் வரவேண்டும்’ என்று கூறினார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இதனால் ஆறுமுகம், சிந்துவை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, சிந்து வேலை செய்யும் நிறுவனத்துக்கு போய் அவரை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். இதன் பிறகு, மாலை 3 மணி அளவில் ஆறுமுகத்தை சந்தித்த தனசேகரன், பணம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, அக்காவை பனியம்பள்ளி பிரிவில் பஸ் ஏற்றிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் சிந்து இரவு ஆகியும் வீட்டுக்கும் வரவில்லை. செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் தனசேகரனிடம் விசாரித்துள்ளனர். அவர் குடிபோதையில் இருந்ததோடு, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரித்தபோது 5 பவுன் நகைக்காக சிந்துவை கொன்று, ஊத்துக்குளி அருகே உள்ள வனப்பகுதியில் பிணத்தை மறைத்து வைத்ததாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்றுசிந்துவின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இடத்தை தனசேகரன் அடையாளம் காட்டினார். அங்கு பாறாங்கற்களால் பாதி மூடப்பட்ட நிலையில் சிந்துவின் சடலம் கிடந்தது.

சம்பவ இடத்திற்கு பெருந்துறை டி.எஸ்.பி. ராஜ்குமார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சென்று ஆய்வு செய்தனர். சிந்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

அஞ்சு பவுன் நகைக்காக அக்காவை தம்பியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories