மேலும் 2 அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் வெளிப்படும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Published:

ஈரோடு: மேலும் 2 அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். அதை நான் வெளிக்கொண்டு வருவேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இளங்கோவன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா செய்த ஊழல்களைப் பற்றி அனைத்துக் கட்சிகளும் பேசிக் கொண்டிருக்கின்றன. நாங்களும் அவற்றை உரிய ஆதாரங்களுடன் கூறி வருகிறோம். ஈரோடு மற்றும் சேலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் செய்த ஊழல்களை விரைவில் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவேன். சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். அதற்கு முன், முதலில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்திவிட்டு பின்னர் கூட்டணி பற்றிப் பேசலாம் என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img