December 5, 2025, 3:17 PM
27.9 C
Chennai

கூண்டு வைத்து பிடிக்கப் பட்ட சிறுத்தை… சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது!

panther erode - 2025

கோவை மதுக்கரையில் குடியிருப்பு பகுதியில் பிடிப்பட்ட சிறுத்தையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டில் அடைத்து தனி வாகனம் மூலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹாடா கொண்டு வரப்பட்டு அங்குள்ள வனத்தில் விடுவிக்கப்பட்டது.

கோவை, மதுக்கரை வனச்சரகத்தில் கரடிமடை மோலப்பாளையம் கிராம பகுதியில் சிறுத்தை நடமாடியது. அங்குள்ள ஆடுகளை வேட்டையாடி தின்றது. இரவு நேரத்தில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக கிராமமக்கள் வெளியே செல்ல அஞ்சினர். தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்தனர்.

கடந்த 40 நாள்களாக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் ஓடிய சிறுத்தை புதன்கிழமை அந்த கூண்டில் வைத்த நாயை சாப்பிட வந்தபோது கூண்டில் சிக்கியது. இதையடுத்து பிடிபட்ட சிறுத்தையை தனி வாகனத்தில் வைத்து சத்தியமங்கலம் காட்டில் விட ஏற்பாடு செய்தனர்.

இந்த சிறுத்தையை பவானி சாகர் சரகம் தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடுவதற்கு பலத்த பாதுகாப்புடன் வனத்துறையினர் பிரத்யேக கூண்டில் அடைத்து கொண்டு வந்தனர். பவானிசாகர் அடுத்த கல்லாம் பாளையம் வனப்பகுதியில் விட தயாரானார்கள். கூண்டை திறந்து விடப்பட்ட போதும் சோர்வு காரணமாக வெளியே வராமல் கூண்டுக்குள் இருந்தது.

வனத்துறையிளர் கூண்டை உள்ள துவாரத்தின் வழியாக சிறுத்தை துரத்தினர். அதனைத் தொடர்ந்து கூண்டில் இருந்து பாய்ந்து ஓடிய சிறுத்தை காட்டுக்குள் சென்றதாக பவானிசாகர் வனச்சரகர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories