பதவியேற்பு விழாவில் குளறுபடி… தலைமை நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த ஆளுநர்!

19 July24 Governer - 2026

சென்னை: கடந்த 12 ஆம் தேதி தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் மாளிகையில் இருக்கைகள் ஒதுக்கப் பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தஹில்ரமணியின் பதவி ஏற்பு விழாவின் போது ஏற்பட்ட குளறுபடிகளுக்கு விஜய கமலேஷ் தஹில்ரமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார் ஆளுநர். இதனை தலைமை நீதிபதி, புதன்கிழமை நேற்று காலை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

governor function - 2026

ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆர்.ராஜகோபால், செவ்வாய்க் கிழமை தனக்கு அழைப்பு கொடுக்கவந்தார் என்றும், அப்போது, அவரும் இதற்காக தனது மன்னிப்பைக் கோரினார் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தைப் பெரிது படுத்தாமல் இத்துடன் விட்டு விடலாம் என்று நீதிபதிகளில் ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சில நீதிபதிகளோ, தங்களுக்கு ப்ரோட்டோகாலை மீறி இருக்கைகளை பின்புறம் ஒதுக்கியதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். இருப்பினும்  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்தனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால், நேற்று  தேநீர் விருந்து அளித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்தில், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  தலைமை நீதிபதி மட்டும் இந்த விருந்தில் கலந்து கொண்டார். மற்ற  நீதிபதிகள் இந்த விருந்தை புறக்கணித்தனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், முதல் வரிசையில் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப் படாமல், அமைச்சர்கள், அதிகாரிகளுக்குப் பின்னர் மூன்றாவது வரிசையில் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப் பட்டதாக பிரச்னை எழுந்தது. இதைக் கண்டித்து விருந்து நிகழ்ச்சியை நீதிபதிகள் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories