பதவியேற்பு விழாவில் குளறுபடி… தலைமை நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த ஆளுநர்!

19 July24 Governer - 2026

சென்னை: கடந்த 12 ஆம் தேதி தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் மாளிகையில் இருக்கைகள் ஒதுக்கப் பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தஹில்ரமணியின் பதவி ஏற்பு விழாவின் போது ஏற்பட்ட குளறுபடிகளுக்கு விஜய கமலேஷ் தஹில்ரமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார் ஆளுநர். இதனை தலைமை நீதிபதி, புதன்கிழமை நேற்று காலை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

governor function - 2026

ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆர்.ராஜகோபால், செவ்வாய்க் கிழமை தனக்கு அழைப்பு கொடுக்கவந்தார் என்றும், அப்போது, அவரும் இதற்காக தனது மன்னிப்பைக் கோரினார் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தைப் பெரிது படுத்தாமல் இத்துடன் விட்டு விடலாம் என்று நீதிபதிகளில் ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சில நீதிபதிகளோ, தங்களுக்கு ப்ரோட்டோகாலை மீறி இருக்கைகளை பின்புறம் ஒதுக்கியதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். இருப்பினும்  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால், நேற்று  தேநீர் விருந்து அளித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்தில், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  தலைமை நீதிபதி மட்டும் இந்த விருந்தில் கலந்து கொண்டார். மற்ற  நீதிபதிகள் இந்த விருந்தை புறக்கணித்தனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், முதல் வரிசையில் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப் படாமல், அமைச்சர்கள், அதிகாரிகளுக்குப் பின்னர் மூன்றாவது வரிசையில் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப் பட்டதாக பிரச்னை எழுந்தது. இதைக் கண்டித்து விருந்து நிகழ்ச்சியை நீதிபதிகள் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories