December 6, 2025, 3:18 AM
24.9 C
Chennai

பதவியேற்பு விழாவில் குளறுபடி… தலைமை நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த ஆளுநர்!

19 July24 Governer - 2025

சென்னை: கடந்த 12 ஆம் தேதி தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் மாளிகையில் இருக்கைகள் ஒதுக்கப் பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தஹில்ரமணியின் பதவி ஏற்பு விழாவின் போது ஏற்பட்ட குளறுபடிகளுக்கு விஜய கமலேஷ் தஹில்ரமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார் ஆளுநர். இதனை தலைமை நீதிபதி, புதன்கிழமை நேற்று காலை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

governor function - 2025

ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆர்.ராஜகோபால், செவ்வாய்க் கிழமை தனக்கு அழைப்பு கொடுக்கவந்தார் என்றும், அப்போது, அவரும் இதற்காக தனது மன்னிப்பைக் கோரினார் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தைப் பெரிது படுத்தாமல் இத்துடன் விட்டு விடலாம் என்று நீதிபதிகளில் ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சில நீதிபதிகளோ, தங்களுக்கு ப்ரோட்டோகாலை மீறி இருக்கைகளை பின்புறம் ஒதுக்கியதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். இருப்பினும்  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால், நேற்று  தேநீர் விருந்து அளித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்தில், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  தலைமை நீதிபதி மட்டும் இந்த விருந்தில் கலந்து கொண்டார். மற்ற  நீதிபதிகள் இந்த விருந்தை புறக்கணித்தனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், முதல் வரிசையில் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப் படாமல், அமைச்சர்கள், அதிகாரிகளுக்குப் பின்னர் மூன்றாவது வரிசையில் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப் பட்டதாக பிரச்னை எழுந்தது. இதைக் கண்டித்து விருந்து நிகழ்ச்சியை நீதிபதிகள் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories