எட்டு வயது மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!

Published:

girl attack image - 2026

சேலத்தில் எட்டு வயதே நிரம்பிய 3ஆம் வகுப்பு படிக்கும் சிறூமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி கணக்கு ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் கணக்கு ஆசிரியராக பணியில் உள்ளார். இவர் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது பெற்றோர், உறவினர்கள் சதீஷை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தொடர்ந்து, சதீஷை பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப் பட்டது. கணக்கு ஆசிரியர் சதீஷ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img