செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு!

senkottai vinayakar chaturti issue7a - 2026

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதன் எதிரொலியாக, செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சில்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், மேலூர் பகுதியில் வீர விநாயகர் சிலை அழைப்பு ஊர்வலம் நடத்தப் பட்டது. அப்போது, ஒரு தரப்பினர் மசூதியை ஒட்டிய பொதுத் தெரு வழியாக ஊர்வலம் செல்லக கூடாது என்றனர். ஆனால்  அதற்கு ஊர்வலத்தில் வந்தவர்கள் உடன்படவில்லை.

இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த நேரத்தில் விநாயகர் சிலை மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

senkottai vinayakar chaturti issue6a - 2026

அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கடைகள், ஏ.டி.எம். மைய முன் பகுதி ஆகியவை  அடித்து நொறுக்கப்பட்டது.  இரு தரப்பினர் மோதலை அடுத்து,  போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசார் இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தியதன்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், பதற்றம் நீடிப்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், செங்கோட்டை தாலுகாவில் தற்போது முதல் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் சில்பா ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தியதில் வழக்கமான பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைதியான முறையில் ஊர்வலம் நடக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories