செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு!

senkottai vinayakar chaturti issue7a - 2026

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதன் எதிரொலியாக, செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சில்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், மேலூர் பகுதியில் வீர விநாயகர் சிலை அழைப்பு ஊர்வலம் நடத்தப் பட்டது. அப்போது, ஒரு தரப்பினர் மசூதியை ஒட்டிய பொதுத் தெரு வழியாக ஊர்வலம் செல்லக கூடாது என்றனர். ஆனால்  அதற்கு ஊர்வலத்தில் வந்தவர்கள் உடன்படவில்லை.

இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த நேரத்தில் விநாயகர் சிலை மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

senkottai vinayakar chaturti issue6a - 2026

அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கடைகள், ஏ.டி.எம். மைய முன் பகுதி ஆகியவை  அடித்து நொறுக்கப்பட்டது.  இரு தரப்பினர் மோதலை அடுத்து,  போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

போலீசார் இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தியதன்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், பதற்றம் நீடிப்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், செங்கோட்டை தாலுகாவில் தற்போது முதல் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் சில்பா ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தியதில் வழக்கமான பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைதியான முறையில் ஊர்வலம் நடக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories