மதுரையில் எய்ம்ஸ்! மத்திய அமைச்சரவை ஒப்புதல் இல்லை என சர்ச்சை கிளப்பிய டிவி சேனல்!

09 June20 AIMS - 2026

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு பெறப்பட்ட பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்று சர்ச்சை கிளப்பியது.

மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த ஜூன் 20ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

750 படுக்கை வசதி, 50 சிறப்பு மருத்துவப் பிரிவுகள், 100 சிறப்பு மருத்துவர்கள் என எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பில் இருந்தது. 100 மருத்துவப் படிப்பு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி, 60 செவிலியர் இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

இதற்காக, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டது. எய்ம்ஸ் வளாகத்திற்கான கட்டுமான பொறியாளர் குழுவும், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் தில்லியில் இருந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான விவரம், செலவினம், டெண்டர், ஈடுபடும் நிறுவனம் என்றெல்லாம் வர்த்தக ரீதியாக தகவல் பெற விரும்பிய ஹக்கிம் காசிம் என்ற நபர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கேள்விகள் அனுப்பியிருந்தார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை, செலவினங்களுக்கான நிதி ஆணைய ஒப்புதல் குறித்த தகவல் வந்து சேராததால், நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுமான டெண்டர் குறித்த தகவல்கள் எதுவும் எங்களிடம் இல்லை என்று பதிலளித்துள்ளது.

aims rti - 2026

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம், மருத்துவக் கல்லூரி தொடர்பான வரைபடம் தயாரிக்கப் பட்டுள்ளதால், சரியான கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து தகவல் அளித்துள்ளார். மதுரையில் நிச்சயம் எய்ம்ஸ் அமையும் என்று கூறி , மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கானபூர்வாங்கப்பணிகள் அனைத்தும் படிப்படியாக துறைவாரியாக மத்திய மாநில அமைச்சகங்களில்அரசாங்க நடைமுறைப்படி செய்யப்பட்டுவரும் சூழலில் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதுமே நிதிஒதுக்கி அரசாணை வரும் என்பது நடைமுறை – என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60ஆண்டுகளில் வந்தது 9இடங்களில் மட்டுமே.ஆனால் கடந்த 4ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி- என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழக சுகாதாரத் துறைச் செயலரின் பதிலையும் குறிப்பிட்டுள்ளார்.

 

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories