மதுரையில் எய்ம்ஸ்! மத்திய அமைச்சரவை ஒப்புதல் இல்லை என சர்ச்சை கிளப்பிய டிவி சேனல்!

09 June20 AIMS - 2026

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு பெறப்பட்ட பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்று சர்ச்சை கிளப்பியது.

மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த ஜூன் 20ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

750 படுக்கை வசதி, 50 சிறப்பு மருத்துவப் பிரிவுகள், 100 சிறப்பு மருத்துவர்கள் என எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பில் இருந்தது. 100 மருத்துவப் படிப்பு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி, 60 செவிலியர் இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

இதற்காக, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டது. எய்ம்ஸ் வளாகத்திற்கான கட்டுமான பொறியாளர் குழுவும், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் தில்லியில் இருந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான விவரம், செலவினம், டெண்டர், ஈடுபடும் நிறுவனம் என்றெல்லாம் வர்த்தக ரீதியாக தகவல் பெற விரும்பிய ஹக்கிம் காசிம் என்ற நபர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கேள்விகள் அனுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை, செலவினங்களுக்கான நிதி ஆணைய ஒப்புதல் குறித்த தகவல் வந்து சேராததால், நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுமான டெண்டர் குறித்த தகவல்கள் எதுவும் எங்களிடம் இல்லை என்று பதிலளித்துள்ளது.

aims rti - 2026

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம், மருத்துவக் கல்லூரி தொடர்பான வரைபடம் தயாரிக்கப் பட்டுள்ளதால், சரியான கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து தகவல் அளித்துள்ளார். மதுரையில் நிச்சயம் எய்ம்ஸ் அமையும் என்று கூறி , மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கானபூர்வாங்கப்பணிகள் அனைத்தும் படிப்படியாக துறைவாரியாக மத்திய மாநில அமைச்சகங்களில்அரசாங்க நடைமுறைப்படி செய்யப்பட்டுவரும் சூழலில் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதுமே நிதிஒதுக்கி அரசாணை வரும் என்பது நடைமுறை – என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60ஆண்டுகளில் வந்தது 9இடங்களில் மட்டுமே.ஆனால் கடந்த 4ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி- என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழக சுகாதாரத் துறைச் செயலரின் பதிலையும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories