காரை விட முடியாதுய்யா- காவலர்! இறங்கி நடந்துட்டா போச்சு- இளையராஜா! ஆச்சரியப்பட்ட அண்ணாமலைவாசிகள்!

ilayaraja thiruvannamalai - 2026

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வீதியில் வெள்ளை ஆடையுடன் இசைஞானி இளையராஜா. தெருவில் இறங்கி நடந்து சென்றதைக் கண்டு, அண்ணாமலைவாசிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையாரை தரிசிக்க இசைஞானி இளையராஜா வந்துள்ளார். தீபத் திருநாளை முன்னிட்டு நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் வேளையில் அங்கே வந்த இளையராஜாவின் காரை காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். ஆனால் காரில் இளையராஜா இருப்பதாகக் கூறியுள்ளார் இசைஞானியின் உதவியாளர். ஆனால் காவலரோ, அதையெல்லாம் கவனத்தில் கொள்ளவில்லை. யாராயிருந்தாலும் அதான்.. என்று கூறிவிட்டார்.

காருக்குள் இருந்து கவனித்துக் கொண்டிருந்த இளையராஜா, உடனே காரை விட்டு இறங்கினார். எல்லோரையும் போல தெருவில் இறங்கி நடந்து வந்தார். கொளுத்தும் வெயிலில் சாலையில் இறங்கி, எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நடந்து வந்த இளையராஜாவைக் கண்டு திருவண்ணாமலைவாசிகள் பெரிதும் ஆச்சரியப் பட்டுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் சென்றது. தொடர்ந்து, சம்பந்தப் பட்ட காவலர் காத்திருந்து இளையராஜாவிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இது குறித்து திருவண்ணாமலை வாழ் வாசகர் ஒருவர் தெரிவித்த போது…

தான் ஒரு பிரபலம் என்று அவர் தன்னை பற்றி எப்போதும் நினைத்தது இல்லை என்பதற்கு இசைஞானி அவர்களின் அந்தச் செயலே சாட்சி!  திருவண்ணாமலை அண்ணாசாலை அருகே கார் ஒன்று நிறுத்தப்படுகிறது . இதற்கு மேல் உள்ளே செல்லக் கூடாது அனுமதி இல்லை என்று சில காவலர்கள் அந்த காரை தடுக்கிறார்கள். உள்ளே யார் இருக்கிறார் என்ற தகவல் சொல்லப்பட்டாலும் அந்தக் காவலர்கள் அதை காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை.

காரில் இருந்து வெள்ளை ஆடை உடுத்திய மனிதர் எதைப் பற்றியும் கவலைப் படாமல் இறங்கி நடக்கத் தொடங்கி விடுகிறார். சாலையில். என் கடையைக் கடந்து நடந்து செல்லும் போது தான் கவனித்தேன்…  இளையராஜா மாதிரி இருக்கிறதே என்று!இசைஞானி இளையராஜா அவர்களேதான்.

இது நடந்தது தீபத்திருவிழா ஆறாம் நாள் மதியத்துக்கு மேல்! இதே ஒரு கட்சி சார்ந்த வட்டமோ மாவட்டமாகவே இருந்தால் நான் யார் தெரியுமா என்று எகிறி இருப்பார்கள் அந்தக் காவலர்களிடம்!

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

ஆனால் எதையுமே யோசிக்காத இசைஞானி அங்கிருந்து ரமணாஸ்ரமம் வரை நடந்தே போய்ச் சேர்கிறார் கூட்டத்தோடு கூட்டமாக! நானும் அவர் சென்றதை பார்த்து வியந்தேன் என்கிறார்.

4 COMMENTS

  1. சம்பந்தப்பட்ட காவலர் ஏன் “வருத்தம்” தெரிவித்தார்? அவர் தனது கடமையை தானே செய்தார்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories