December 6, 2025, 4:07 AM
24.9 C
Chennai

கரூரில் முழு இரவு தர்ணா நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்!

karurvao - 2025

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முழு இரவு தர்ணா  போராட்டம்   நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 24ம் தேதி  நடைபெற்ற போது  நிறவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையதள கணிப்பொறி வசதி  , சொந்த மாவட்டத்தில் பணி மாறுதல் பெற அனுமதிக்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் கிராம நிர்வாக பணிக்கு பட்டாதாரி கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்  உள்ளிட்ட   9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழு இரவு நேர காத்திருப்பு போராட்டத்தை கரூர் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் மங்கையர்கரசி, பொருளாளர் முத்துப்பிரியன் உட்பட  20 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை  துவக்கியுள்ளனர்.

முன்னதாக சங்கத்தின் சார்பில் தீர்மானிக்கப்பட்ட 4கட்ட போராட்டத்தின் அடிப்படையில்  ஏற்கனவே நவம்பர் 28 முதல் இணையதள விண்ணப்பங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று டிசம்பர்5 ம்தேதி இரண்டாம் கட்ட போராட்டமாக முழு இரவு நேர காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். நாளை மறுநாள் டிசம்பர்7ம்தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர். இறுதிகட்ட போராட்டமாக காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories