புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஐடியல் மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் சேக்சுல்தான் தலைமை வகித்தார்.நிர்வாக அலுவலர் சித்திசுலைகா,வாகிதாதேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதல்வர்கள் மெட்ரிக் முத்துகுமார் சிபிஎஸ்இ வர்கிஸ் ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் சமத்துவ பொங்கல்வைத்து வழிபாடு செய்து அனைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தி கலாச்சார நடனத்துடன் விழா நிறைவடைந்தது. துணை முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார்.




