அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே ராசேந்திரபுரம் நைனாமுகமது மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரி தாளாளர் முகமது பாருக் தலைமை வகித்தார்.கலைக்கல்லூரி முதல்வர் ராபர்ட் அலச்சாண்டர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்ஜெய்மனோகரம் பள்ளி முதல்வர் கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் முன்னதாக கோலப்போட்டியும் அதனை தொடர்ந்து பொங்கல்விழாவும் அதனை தொடர்ந்து கோலாட்டமும் நடந்தது.விழாவில் துறை தலைவர்கள் ஈஸ்வரி மோகனா அகிலா மங்கையர்கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




