செங்கோட்டை வழியே தினசரி எக்ஸ்பிரஸ்; சென்னை – கொல்லம் எக்ஸ்ப்ரஸ் தொடக்கம்!

piyush flag - 2026

சென்னை -கொல்லம் இடையே செங்கோட்டை, தென்காசி வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் தனது இயக்கத்தை இன்று தொடங்கியது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அதே நேரம், சென்னை எழும்பூரில் இருந்து இந்த ரயில் புறப்பட்டது.

இதற்கான தொடக்க விழா சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை இன்று  மாலை நடைபெற்றது.

இந்த ரயில் (வண்டி எண் 16101) தினமும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. தென்காசிக்கு மறுநாள் காலை 4.13 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 5.10 மணிக்கும் வந்து, கொல்லத்தை காலை 8.45 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து இந்த ரயில் (வண்டி எண் 16102) காலை 11.45 மணிக்கு புறப்படுகிறது. செங்கோட்டைக்கு மாலை 3.10 மணிக்கும், தென்காசிக்கு 3.28 மணிக்கும் வந்து செல்கிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்குச் சென்றடைகிறது.

இந்த ரயிலில் மூன்றடுக்கு ஏ.சி. வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, 2 பொது பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளது.

கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம் மக்களின் வெகுநாள் கோரிக்கையான இந்த ரயிலை இப்போது மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார் பியூஷ் கோயல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories