டேனியல் காந்தி, செபஸ்டியன் சீமான் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு!

11 kaththi seeman - 2026

இந்திய ராணுவத்தையும் மத்திய அரசையும் பற்றி அவதூறு பரப்பிவரும் திருமுருகன் காந்தி மற்றும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சியின் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் 14ஆம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களையும் மத்திய அரசையும் தொடர்ந்து அவதூறாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் பொது மேடைகளில் பேசுவதும் வழக்கமாக கொண்ட திருமுருகன் காந்தி என்கின்ற டேனியல் காந்தி மற்றும் சீமான் என்கின்ற செபாஸ்டின் சைமன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவ்வாறு அவர்கள் தொடர்ந்து பேசி வருவது வளர்ந்து வரும் இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போன்று இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் திரு. A.K.விஸ்வநாதனிடம் புகார் மனு அளித்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஊடகவியாளர் நலச்சங்க அலுவலக செயலாளர் கிருஷ்ணவேணி ஜெயராமன் திருமுருகன்காந்ததி என்கிற டேனியல் காந்தி என்பவர் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் என்பது ஒரு தேர்தல் நாடகம் என்றும் அரசியல் லாபத்திற்காக நடத்தப் பட்டது என்றும் மிக கேவலமாக பேசி வருகிறார்! இவரின் இந்தப் பேச்சு இந்திய இறையாண்மைக்கும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் கேள்விக்குறியாக இருக்கிறது.

சீமான் என்கின்ற செபாஸ்டின் சைமன் கடந்த 26-2-2019 அன்று நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை மிகவும் கேவலமான விமர்சனங்களை ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்!  மேலும் அவர் பாகிஸ்தான் மீது நடத்திய விமான தாக்குதல் ஒரு கோழைத்தனமானது என்றும் இதுவே சீனாவுடன் இந்தியா போர் தொடுக்குமா என்றும் கேலி கிண்டலாக இந்திய இராணுவத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.

மேற்கண்ட நபர்கள் அனைவரும் இந்தியாவை துண்டாடும் நோக்கத்துடணும் இந்தியா பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக பேசி வருகின்றனர். அதனால் அவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

இதனை  தேசிய ஊடகவியாளர் நலச்சங்க அலுவலக செயலாளர் கிருஷ்ணவேணி ஜெயராமன் தெரிவித்தார்.

செய்தி:- சுரேந்தர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories