December 6, 2025, 11:30 AM
26.8 C
Chennai

மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு! 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

dinakaranoffice atttack - 2025

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு, பணியாளர்கள் 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உட்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

தினகரன் நாளிதழில் ஒரு விவகாரமான கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. திமுக., வாரிசுச் சண்டை கோலொச்சிய நேரம். கருணாநிதிக்குப் பின்னர் திமுக.,வில் அடுத்த வாரிசு யார் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. அதில், 70 சதவீதம் பேர் ஸ்டாலின் வர விரும்புவதாகக் கூறியுள்ளனர் என்று முடிவுகள் பிரசுரிக்கப் பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த மதுரையில் இருந்த அழகிரி தரப்பினர் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தியதுடன், கலவரத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மதுரை தினகரன் அலுவலகத்தின் மீது ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி அலுவலகத்தையே தீயிட்டு கொளுத்தியது. இதில், அலுவலகத்தில் இருந்த கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் என மூன்று பணியாளர்கள் அலுவலகத்தினுள்ளேயே உயிரிழந்தனர்.

இது குறித்த சிபிஐ.,யின் விசாரணையைத் தொடர்ந்து, வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிபிஐ., மேல் முறையீடு செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, முன்னாள் திமுக தொண்டர் அணி அமைப்பாளர் அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories