துக்ளக் வார இதழ் மீது தி.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கனும் திராடர் கழக தலைவர் கி.வீரமணியும், திராவிடர் கழகத்தினரும் தான் காரணம் என்ற வகையில் துக்ளக் வார இதழில் கட்டுரை வெளியானதாகவும், இதற்காக அதன் மீது புகார் தெரிவித்துள்ளதாகவும் திக.வினர் கூறியுள்ளனர்.
துக்ளக் வார இதழில் திராவிடர் கழகத்தை பற்றி அவதூறான வகையில் கட்டுரை வெளியானதாகக் கூறி, அதனைக் கண்டித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கட்டுரையாளர் சத்யா, பதிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் புகார் மனு அளித்துள்ளார்.
முன்னதாக, பொள்ளாச்சி சம்பவத்தை முன்னிட்டு பகவான் கிருஷ்ணரை தொடர்பு படுத்தி தி.க. தலைவன் வீரமணி பேசியிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது.


