கொள்ளையனிடம் கூட்டுவைத்து நகைக் கொள்ளை! தனிப்படை போலீஸார் மீது விசாரணை!

Burglar theft house - 2026

சென்னையில் கொள்ளையனுடன் கூட்டுவைத்துக் கொண்டு, கொள்ளை அடிக்கப் பட்ட நகைகளை தாங்களே கொள்ளை அடித்துக் கொண்ட தனிப்படை போலீசார் 3 பேர் தற்போது விசாரிக்கப் பட்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த இந்தச் சம்பவம் குறித்து கூறப் படுவதாவது…

சென்னை நகரில் ஆளில்லாத வீட்டினுள் புகுந்து, நகைகளைக் கொள்ளை அடித்த ஆரிப் பிலிப் என்ற கொள்ளையனை அசோக் நகர் போலீசார் கைது செய்தனர். அவனிடம் கொள்ளை அடித்த நகைகள் குறித்து போலீஸார் விசாரித்த போது, ஒரு நகை வியாபாரியின் பெயரைச் சொல்லி, அவரிடம் விற்றுள்ளதாகக் கூறியுள்ளான்.

கொள்ளையன் கூறிய அடையாளத்தை வைத்துக் கொண்டு அந்தக் கடைக்குச் சென்றனர் போலீஸார். அப்போது ஆரிப் பிலிப் விற்ற திருட்டு நகைகள் குறித்து போலீஸார் விசாரித்துள்ளனர். தொடர்ந்து, அந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்குமாறு அவரிடம் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அந்த வியாபாரியோ இதே போன்று விசாரணை செய்த போலீஸார், அந்த நகைகளை வாங்கிச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், ஆரிப் பிலிப்பை இதற்கு முன்னர் பிடித்தது எந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் என்று அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அந்தக் கொள்ளையன் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் தன்னைப் பிடித்ததாகக் கூறியுள்ளான்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இந்நிலையில், அவனிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையனுக்கு உடந்தையாக தனிப்படை போலீசார் செயல்பட்டது தெரியவந்தது. நகைகளை விற்ற கடை குறித்து தனிப் படை போலீசார் தன்னிடம் கேட்டதாகவும், அவர்களிடம் அந்தக் கடையை தாம் காட்டியதாகவும் கூறினான் ஆரிப் பிலிப்.

இதை அடுத்து அந்தக் கடைக்குச் சென்ற தனிப்படையினர், திருட்டு நகைகள் எனக் கூறி அவற்றை வாங்கிக் கொண்டு, ஒரு சிறு பங்கை தனக்குக் கொடுத்துவிட்டு மீதியை தாங்களே வைத்துக் கொண்டதாகவும், இந்த டீலிங் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்றும், போலீசிடம் சிக்காமல் இருக்குமாறும் தனிப்படையினர் அறிவுரை வழங்கியதாகவும் கூறியுள்ளான்.

இதை அடுத்து, தனிப்படை போலீஸாரின் திருட்டுத் தனம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கோடம்பாக்கம் காவல் நிலைய தனிப்படை போலீசார் ராம்குமார், சிவக்கொழுந்து, தியாகராஜன் மூவரும் உயர் அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை உறுதி என்கின்றனர் போலீஸார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Entertainment News

Popular Categories